புதுச்சேரியில் இன்று விஜய் பிரச்சாரம்...3 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்

Apr 04, 2026,10:20 AM IST

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். திரையுலகில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், தனது கட்சியின் முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி பிரச்சாரம் :


இன்று காலை முதல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கிறார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அவரது பயணத் திட்டத்தின் படி,


காலை 10:00 மணி: புதுவை தட்டாஞ்சாவடி பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

காலை 11:00 மணி: முக்கிய வர்த்தகப் பகுதியான கடலூர் சாலையில் வாக்கு சேகரிக்கிறார்.

பகல் 12:00 மணி: மதிய வேளையில் தவளக்குப்பம் சந்திப்பு பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


கட்டுப்பாடுகளுடன் கூடிய பிரச்சாரம் :




விஜய்யின் வருகையை முன்னிட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிகளை மதித்து தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 5,000 நபர்களுக்கு மேல் பிரச்சாரக் கூட்டத்தில் அனுமதி இல்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் தன்னார்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


தலைவர் விஜய்யைக் காண்பதற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போதே தட்டாஞ்சாவடி மற்றும் தவளக்குப்பம் பகுதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பிரச்சாரத்திற்காக காலையிலேயே தனது காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் விஜய். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 30 தொகுதிகளிலும் போட்டியிடுவது. புதுச்சேரியில் ஏப்ரல் 09ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மொத்தம் 19 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நேராக சென்று பிரச்சாரம் செய்து விட்டு, மற்ற பகுதிகளில் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்