புதுச்சேரியில் இன்று விஜய் பிரச்சாரம்...3 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்

Apr 04, 2026,10:20 AM IST

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். திரையுலகில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், தனது கட்சியின் முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி பிரச்சாரம் :


இன்று காலை முதல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கிறார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அவரது பயணத் திட்டத்தின் படி,


காலை 10:00 மணி: புதுவை தட்டாஞ்சாவடி பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

காலை 11:00 மணி: முக்கிய வர்த்தகப் பகுதியான கடலூர் சாலையில் வாக்கு சேகரிக்கிறார்.

பகல் 12:00 மணி: மதிய வேளையில் தவளக்குப்பம் சந்திப்பு பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


கட்டுப்பாடுகளுடன் கூடிய பிரச்சாரம் :




விஜய்யின் வருகையை முன்னிட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிகளை மதித்து தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 5,000 நபர்களுக்கு மேல் பிரச்சாரக் கூட்டத்தில் அனுமதி இல்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் தன்னார்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


தலைவர் விஜய்யைக் காண்பதற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போதே தட்டாஞ்சாவடி மற்றும் தவளக்குப்பம் பகுதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பிரச்சாரத்திற்காக காலையிலேயே தனது காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் விஜய். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 30 தொகுதிகளிலும் போட்டியிடுவது. புதுச்சேரியில் ஏப்ரல் 09ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மொத்தம் 19 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நேராக சென்று பிரச்சாரம் செய்து விட்டு, மற்ற பகுதிகளில் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்