நாகை: நாளை நாகையில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முக்கிய கட்சித் தலைவர்களும் பல்வேறு கட்டங்களாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டின் புது வரவான தவெக கட்சியும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது.
தவெக கட்சியின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்த பின்னர் விக்கிரவாண்டியிலும், மதுரையிலும் பிரம்மாண்ட அளவில் 2 மாநாடுகளை நடத்தியுள்ளார். இது தவிர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தையும் அவ்வப்போது நடத்தி கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பூத் கமிட்டி மாநாடுகள் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மாநிலம் தழுவிய அளவில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.
திருச்சியில் நடந்த முதல் பிரச்சார பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த தவெகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிகள் வகுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தவெகவினரின் இரண்டாம் கட்டப் பிரச்சாரம் நாளை நாகையில் நடைபெற உள்ளது. இதற்காக புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி ஸ்டேடியம், நாகூர் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நாகை போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு போலீசார் மேற் குறிப்பிட்ட இடங்களில் புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக நாளை பிற்பகல் 12.30 மணியளவில் நாகையில் உள்ள அண்ணாசிலை அருகே விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பிரச்சாரம் அரை மணி நேரத்தில் பேசி முடிக்க வேண்டும் என்றும், விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்க்கூடாது எனவும் போலீசார் தரப்பில் நிபந்தனை விதக்கப்பட்டுள்ளது.
மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!
நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்
தங்கம் விலை நேற்று போல் இன்று இல்லை... மீண்டும் உயர்ந்தது... கவலையில் வாடிக்கையாளர்கள்
ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
கிழக்கு ரஷ்யாவை அதிர வைத்த பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
{{comments.comment}}