தெஹ்ரான் : ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 103 பேர் உயிரிழந்துள்ளனர். 141 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈரானின் தெற்கு பகுதி நகரமான கெர்மானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 103 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏராளமானவர்கள் மிகவம் மோசமாக காயடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 141 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2020ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாஹிப் அல் ஜமான் மசூதி அருகே ஏராளமான மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அலறும் காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பெண் கூறுகையில், நான் காயமடையவில்லை. ஆனால் என்னுடைய ஆடை முழுவதும் ரத்தம். இந்த தெருவின் மற்றொரு பக்கத்தில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். முதல் குண்டுவெடிப்பு, இரண்டாவது குண்டுவெடிப்பை விட சக்தி வாய்ந்ததாக இருந்ததாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு ஈரான் அதிபர் ரைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடப்படுவார்கள், கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று ்அவர் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}