டிவிட்டரிலிருந்து மேலும் பல ஊழியர்கள் டிஸ்மிஸ்... சிங்கப்பூர், டப்ளினில் அதிரடி!

Jan 08, 2023,09:40 AM IST
சிங்கப்பூர்: டிவிட்டர் நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் டப்ளின் அலுவலகத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே,சிக்கணம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3700 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் சிங்கப்பூர், டப்ளின் கிளைகளைச்சேர்ந்த 12க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது டிவிட்டர்.



இவர்கள் அனைவரும் trust and safety அணிகளைச் சேர்ந்தவர்கள். அவதூறு கருத்துக்கள், துன்புறுத்தல் ஆகியவற்றை மாடரேட் செய்யும் முக்கியமான பணிகளைச் செய்து வரும் அணி இது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் - நூர் அஸார் பின் அயூப், ஆசியா பசிபிக் பிராந்திய trust and safety அணியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் சீனியர் டைரக்டர் அனால்சியா டோமினிக்ஸ்.

ஆனால் இந்த பணி நீக்கத்தால் trust and safety அணியின் பணி எந்த வகையிலும் பாதிக்காது என்று டிவிட்டர் துணைத் தலைவர் எல்லா இர்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், இந்த அணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர். சிலர்தான் நீக்கப்பட்டுள்ளனர். எனவே பணிகள் பாதிக்காது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்