சகோ. வினோத்குமார்
டெல்லி: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை போன்று டெல்லியிலும் அடல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அடல் உணவகத்தை டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார்.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ரேகா குப்தா வெற்றி பெற்றார். இவர் டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் டெல்லியில் 100 அடல் கேண்டின் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டெல்லியில் 45 அடல் கேண்டின் திறக்கப்பட்டது.

அடல் கேண்டினில் தினசரி மதியம் மற்றும் இரவு உணவுகள் 5 ரூபாய்க்கு வழங்கப்படும். பருப்பு சாதம், சப்பாத்தி, பருவத்திற்கு ஏற்ற காய்கறிகள் போன்றவற்றுடன் சத்தான உணவாக வழங்கப்படும். இந்த உணவகம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையும் , மாலை 6.30 மணி முதம் 9.30 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடல் கேண்டீன் திட்டத்தின் முன்னோடியாக தமிழ்நாட்டின் அம்மா உணவகம் உள்ளது. 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. புயல், வெள்ளம் போன்ற கடினமான காலங்களில் அம்மா உணவகம் மூலம் இலவச உணவுகள் வழங்கப்பட்டு ஏழை மக்களின் பசித்துயர் தீர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலை தேடுபவர்கள், ஆதரவற்ற முதியவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கு இது வரப்பிரசாதமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் என் டி ஆர் மற்றும் இந்திரா என்ற பெயர்களில் உணவகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது டெல்லியிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அடல் கேண்டீன் மூலம் ஏழைகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Khamenei Assasination: விரைவில் வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்.. ஈரான் எச்சரிக்கை
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
{{comments.comment}}