அபுதாபி: அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி அவரது உயிரைக் காத்துள்ளார் தந்தை.
கடந்த 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருபவர் தான் இம்ரான் கான். இவருக்கு வயது 40 ஆகும். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்தார். ஷைமாவுக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2019ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்னர் இம்ரான் கானுக்கு ரசியா என்ற மகள் பிறந்தார். அந்த சிறுமிக்கும் அதே வகையான உயிரை கொல்லும் கல்லீரல் நோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் நோயை குணமாக்க சுமார் 2 கோடியே 30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாதாரண ஊழியரான அவருக்கு அந்த தொகையை தயார் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இம்ரான் கான் மிகுந்த மன வேதனை அடைந்தார். தன்னால் முயன்ற அளவு பணத்தை திரண்ட முயன்றார். ஒரு மகளை இழந்த அவருக்கு இந்த மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதன்பின்னர், தொண்டு அமைப்பான செம்பிறை சங்கத்தை தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் கல்லீரல் கிடைத்தால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக கூறினர்.
இதனை அடுத்து கல்லீரல் தானத்திற்காக பல இடங்களில் முயற்சி செய்த இம்ரான் கான். கடைசியில் தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகளுக்காக தானமாக கொடுக்க முடிவு செய்தார். மருத்துவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசியாவிற்கு. இந்த சிகிச்சைக்கு பின்னர் தந்தை, மகள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இம்ரான் கான் கூறுகையில், எனது மகளின் கண் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போது தான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். தந்தை என்ற முறையில் எனது மகளுக்காக நான் தான் இதனை செய்ய வேண்டும். அதன்படி அதை செய்தேன் என தெரிவித்தார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}