அபுதாபி: அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி அவரது உயிரைக் காத்துள்ளார் தந்தை.
கடந்த 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருபவர் தான் இம்ரான் கான். இவருக்கு வயது 40 ஆகும். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்தார். ஷைமாவுக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2019ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்னர் இம்ரான் கானுக்கு ரசியா என்ற மகள் பிறந்தார். அந்த சிறுமிக்கும் அதே வகையான உயிரை கொல்லும் கல்லீரல் நோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் நோயை குணமாக்க சுமார் 2 கோடியே 30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாதாரண ஊழியரான அவருக்கு அந்த தொகையை தயார் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இம்ரான் கான் மிகுந்த மன வேதனை அடைந்தார். தன்னால் முயன்ற அளவு பணத்தை திரண்ட முயன்றார். ஒரு மகளை இழந்த அவருக்கு இந்த மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதன்பின்னர், தொண்டு அமைப்பான செம்பிறை சங்கத்தை தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் கல்லீரல் கிடைத்தால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக கூறினர்.
இதனை அடுத்து கல்லீரல் தானத்திற்காக பல இடங்களில் முயற்சி செய்த இம்ரான் கான். கடைசியில் தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகளுக்காக தானமாக கொடுக்க முடிவு செய்தார். மருத்துவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசியாவிற்கு. இந்த சிகிச்சைக்கு பின்னர் தந்தை, மகள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இம்ரான் கான் கூறுகையில், எனது மகளின் கண் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போது தான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். தந்தை என்ற முறையில் எனது மகளுக்காக நான் தான் இதனை செய்ய வேண்டும். அதன்படி அதை செய்தேன் என தெரிவித்தார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}