தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. மகளுக்காக.. கல்லீரலை தானம் செய்து காப்பாற்றிய தந்தை!

Jul 12, 2024,05:18 PM IST

அபுதாபி:  அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கி அவரது உயிரைக் காத்துள்ளார் தந்தை.


கடந்த 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வருபவர் தான் இம்ரான் கான். இவருக்கு வயது 40 ஆகும். இவருக்கு ஷைமா என்ற மகள் இருந்தார். ஷைமாவுக்கு பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு 2019ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பின்னர் இம்ரான் கானுக்கு ரசியா என்ற மகள் பிறந்தார். அந்த சிறுமிக்கும் அதே வகையான உயிரை கொல்லும் கல்லீரல் நோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் நோயை குணமாக்க சுமார் 2 கோடியே 30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.




சாதாரண ஊழியரான அவருக்கு அந்த தொகையை தயார் செய்வது கடினமாக இருந்தது. இதனால் இம்ரான் கான் மிகுந்த மன வேதனை அடைந்தார். தன்னால் முயன்ற அளவு பணத்தை திரண்ட முயன்றார். ஒரு மகளை இழந்த அவருக்கு இந்த மகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதன்பின்னர், தொண்டு அமைப்பான செம்பிறை சங்கத்தை தொடர்பு கொண்டார். அந்த அமைப்பினர் கல்லீரல் கிடைத்தால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாக கூறினர்.


இதனை அடுத்து கல்லீரல் தானத்திற்காக பல இடங்களில் முயற்சி செய்த இம்ரான் கான். கடைசியில் தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகளுக்காக தானமாக கொடுக்க முடிவு செய்தார். மருத்துவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசியாவிற்கு. இந்த சிகிச்சைக்கு பின்னர் தந்தை, மகள் இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


அறுவை சிகிச்சைக்கு பின்னர் இம்ரான் கான் கூறுகையில், எனது மகளின் கண் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போது தான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். தந்தை என்ற முறையில் எனது மகளுக்காக நான் தான் இதனை செய்ய வேண்டும். அதன்படி அதை செய்தேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்