டெல்லி: இன்று நடைபெறுவதாக இருந்த இளங்கலை நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் படிக்கு மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய தகுதி தேர்வு நடந்து வருகிறது. இந்த நீட் சம்பந்தமாக ஏகப்பட்ட பிரச்சனைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

ஜூலை 6ம் தேதி ஆதாவது இன்று இந்தியா முழுவதும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்ததால், கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் ஜூலை 8 நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் நீட் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோருடன் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்சநீதி மன்றத்தில் விசாரிக்க உள்ளது.
இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த நீட் இளங்கலை நுழைவுத் தேர்விற்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு தேதி வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு குறித்த தகவல்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றும் சிலர் வழக்கு பதிவு செய்துள்ளதால், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று பெறும் எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}