லண்டன்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டுமே காவல்துறை ஆதரவு தருவதாகவும், எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு தருவதில்லை என்று அவர் குறை கூறிப் பேசியதால் பிரதமர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் மூத்த அமைச்சரான சுயெல்லா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சுயெல்லா பிரேவர்மேன் பேசும்போது, காவல்துறை பேரணிகளுக்கு அனுமதி தருவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால் பாலஸ்தீன எதிர்ப்புப் பேரணிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுயெல்லாவின் பேச்சு தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும், வலது சாரி போராட்டக்காரர்களை ஊக்குவிக்க உதவும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவையும் மிறி சுயெல்லா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.
43 வயதான சுயெல்லா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோவாவில் பிறந்தவர். அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுயெல்லாவின் பேச்சு லண்டன் போலீஸாரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கண்டித்திருந்தனர்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}