லண்டன்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டுமே காவல்துறை ஆதரவு தருவதாகவும், எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு தருவதில்லை என்று அவர் குறை கூறிப் பேசியதால் பிரதமர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் மூத்த அமைச்சரான சுயெல்லா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சுயெல்லா பிரேவர்மேன் பேசும்போது, காவல்துறை பேரணிகளுக்கு அனுமதி தருவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால் பாலஸ்தீன எதிர்ப்புப் பேரணிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுயெல்லாவின் பேச்சு தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும், வலது சாரி போராட்டக்காரர்களை ஊக்குவிக்க உதவும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவையும் மிறி சுயெல்லா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.
43 வயதான சுயெல்லா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோவாவில் பிறந்தவர். அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுயெல்லாவின் பேச்சு லண்டன் போலீஸாரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கண்டித்திருந்தனர்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}