லண்டன்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டுமே காவல்துறை ஆதரவு தருவதாகவும், எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு தருவதில்லை என்று அவர் குறை கூறிப் பேசியதால் பிரதமர் ரிஷி சுனக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் மூத்த அமைச்சரான சுயெல்லா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சுயெல்லா பிரேவர்மேன் பேசும்போது, காவல்துறை பேரணிகளுக்கு அனுமதி தருவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால் பாலஸ்தீன எதிர்ப்புப் பேரணிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுயெல்லாவின் பேச்சு தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும், வலது சாரி போராட்டக்காரர்களை ஊக்குவிக்க உதவும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவையும் மிறி சுயெல்லா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.
43 வயதான சுயெல்லா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோவாவில் பிறந்தவர். அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் பலரும் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுயெல்லாவின் பேச்சு லண்டன் போலீஸாரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கண்டித்திருந்தனர்.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}