கீவ்: உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வெகு தூரத்திலிருந்து அதாவது 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. உலக சாதனையாக இதை உக்ரைன் தரப்பு பெருமையாக சொல்லி வருகிறது.
இதுதொடர்பான செய்தி ஒன்றை நியூஸ்வீக் வெளியிட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், (உக்ரைன் செக்யூரிட்டி சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்) ரஷ்ய வீரர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்துள்ளார். ஊடுறுவி வந்த அவர்களை கிட்டத்தட்ட 3.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அவர் தனது ஸ்னைப்பார் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டார். இதில் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் பின்வாங்கிச் சென்று விட்டனர்.
மிக மிக தூரத்திலிருந்து குறி பார்த்து சுட்டு ஒருவரை வீழ்த்தியிருப்பது சர்வதேச போர்க்களத்தில் இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இது கின்னஸ் சாதனைக்கும் தகுதியானது என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.

உக்ரைன் வீரர் துப்பாக்கியால் சுட்டதும் ரஷ்ய ராணுவ வீரர்கள் வேகமாக தரையில் படுத்து மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்க முயல்வதும் ஸ்னைப்பரில் தெளிவாக பதிவாகியுள்ளது.
கனடா படையின் முந்தைய சாதனை
இதற்கு முன்பு 2017ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்க கூட்டுப் படையில் இடம் பெற்றிருந்த கனடா சிறப்புப் படைப் பிரிவு வீரர் ஒருவர் 3.54 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை உக்ரைன் வீரர் மிஞ்சியுள்ளார்.
அதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர் கிரேக் ஹாரிசன் என்பவர் 2.48 கிலோமீட்டர் தொலைவிலிருந்து சுட்டு தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளியை சுட்டுக் கொன்றார் என்பது நினைவிருக்கலாம்.
உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்து விட்டன. விடாமல் இரு தரப்பும் போர் புரிந்து கொண்டுள்ளன.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}