படிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொன்ன வாத்தியார் டிஸ்மிஸ்!

Aug 18, 2023,09:40 AM IST
டெல்லி: படித்தவர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று மாணவர்களுக்குப் போதித்த ஆசிரியரை வேலையை விட்டு நீக்கியுள்ளது அன்அகாடமி நிறுவனம்.

அன்அகாடமி என்பது நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் கொடுக்கும் ஆன்லைன் கல்வி நிறுவனம் ஆகும். இதில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் கரண் சங்வான். இவர் தான் வகுப்பு எடுத்தபோது அங்கிருந்த மாணவர்களிடம், தேர்தலின்போது படித்த , தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.



இதைத் தொடர்ந்து தற்போது சங்க்வானை வேலையை விட்டு நீக்கியுள்ளது அன்அகாடமி நிறுவனம். இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள டிவீட்டில்,  தரமான கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட கல்வி நிறுவனம் இது.  இந்த இடத்தில் எங்களது அனைத்து போதனையாளர்களும் ஒழுங்கை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பயில வரும் மாணவர்களுக்கு பாரபட்சமில்லாத அறிவைப் புகட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்.

வகுப்பறை என்பது தனிப்பட்ட அரசியல் கருத்துக்களைப் பகிரும் இடம் இல்லை. அது மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச் சென்று விடும். இந்த நிலையில், ஆசிரியர் கரண் சங்க்வானை அவரது விதிமுறை மீறலுக்காக நீக்கும் முடிவை எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

கெஜ்ரிவால் கண்டனம்

அன்அகாடாமியின் இந்த செயலுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். படித்த வேட்பாளரை தேர்ந்தெடுங்க என்று சொல்வது குற்றச் செயலா என்றும் அவர் ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

அன்அகாடமியின் செயலை  பலரும் கூட கண்டித்து வருகின்றனர். வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு ஆசிரியர், படித்த வேட்பாளரை தேர்வு பண்ணுங்க என்று கூறுவது எந்த வகையில் தவறானது என்றும் பலர் அன்அகாடமிக்கு கேள்வியை முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்