சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று இரவு சென்னைக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னதாக, அதிமுக பாஜக இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறி வந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிவு ஏற்பட்டு இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் பாஜகவும் அதிமுகவும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இதில் உடன்பாடு ஏற்படாமல் இப்பதவியில் இருந்து விலகி உள்ளார்.
இந்த நிலையில் பாஜக தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் எடுக்க
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இன்று இரவு 10.15 மணிக்கு சென்னைக்கு வருகிறார். பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார்.
இதனையடுத்து, நாளை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரையும் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகளைந எடுக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}