தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

Apr 10, 2025,04:38 PM IST

சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று இரவு சென்னைக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 

முன்னதாக, அதிமுக பாஜக இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறி வந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிவு ஏற்பட்டு இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 


ஆனால் தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு  அதிமுக பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் பாஜகவும் அதிமுகவும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இதில் உடன்பாடு ஏற்படாமல் இப்பதவியில் இருந்து விலகி உள்ளார்.




இந்த நிலையில் பாஜக தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் எடுக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இன்று இரவு 10.15 மணிக்கு சென்னைக்கு வருகிறார். பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார்.


இதனையடுத்து, நாளை  பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரையும் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.


அதே சமயத்தில் தமிழக பா.ஜ.க தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகளைந எடுக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்