சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன்,இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடக்க போகிறது. ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்று கூறியுள்ளார்.
பாஜக, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திருச்சி வந்திருந்தார். அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முருகன் கூறியதாவது:
400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் நிச்சயம் பாஜக 310 இடங்களையும் கைப்பற்றி முன்னணியில் வரும். காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெற்றி பெறாது.

திமுக கூட்டணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும். பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் மக்களிடம் பொய்யாக திரித்து பேசி வருகிறார் தமிழக முதல்வர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்பம் வரப்போகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜகவின் வெற்றி வரலாற்று சாதனையாக அமையும். இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என பேசி உள்ளார்.
Chennai Super Kings vs RCB: கோட்டை விட்டதைப் பிடித்தார் ஷிவம் துபே.. வச்சு செய்த விராட் கோலி.. அவுட்
US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்
Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
ஏசு பாலன் வருகிறார்!
Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!
ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை
{{comments.comment}}