சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன்,இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடக்க போகிறது. ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்று கூறியுள்ளார்.
பாஜக, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திருச்சி வந்திருந்தார். அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முருகன் கூறியதாவது:
400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தான் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் நிச்சயம் பாஜக 310 இடங்களையும் கைப்பற்றி முன்னணியில் வரும். காங்கிரஸ் 40 தொகுதிகள் கூட வெற்றி பெறாது.
திமுக கூட்டணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும். பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் மக்களிடம் பொய்யாக திரித்து பேசி வருகிறார் தமிழக முதல்வர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்பம் வரப்போகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் பாஜகவின் வெற்றி வரலாற்று சாதனையாக அமையும். இதுவரை யாரும் எதிர்பாராத அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம் என பேசி உள்ளார்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}