Ira Kalaiselvi short story: ஒற்றுமையே பலம்!

Apr 09, 2026,01:04 PM IST

- தமிழ்மாமணி  இரா.  கலைச்செல்வி   


அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் 6-ஏ வகுப்பு மிகவும் விசித்திரமானது. அந்த வகுப்பில் மூன்று விதமான குழுக்கள் இருந்தன:


'ரேங்க்' குரூப்: எப்போதும் படிப்பு, மார்க் என்று மட்டுமே பேசும் மாணவர்கள்.


'விளையாட்டு' குரூப்: மைதானமே கதி என்று கிடப்பவர்கள்.


'கடைசி பெஞ்ச்' குரூப்: வறுமை அல்லது குடும்பச் சூழ்நிலையால் படிப்பில் ஆர்வம் குறைந்த, ஆனால் கைவேலைப்பாடுகளில் கெட்டிக்காரர்களான மாணவர்கள்.


இந்த மூன்று குழுக்களும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வார்களே தவிர, சேர்ந்து பேசமாட்டார்கள்.


இந்த நிலையில் அந்தப் பள்ளியில் ஆண்டு விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டன. "சிறந்த வகுப்பிற்கு" ஒரு பெரிய சுழற்கோப்பை வழங்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை: "அந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அறிவியல் கண்காட்சியையும், ஒரு கலை நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும். ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது."




வகுப்புத் தலைவன் கார்த்திக்கு (ரேங்க் குரூப்) கவலை வந்துவிட்டது. "விளையாட்டுப் பசங்களுக்குப் படிக்கத் தெரியாது, கடைசி பெஞ்ச் பசங்களுக்கு ஒழுக்கம் தெரியாது, நாங்க மட்டும் எப்படிச் ஜெயிக்கிறது?" என்று புலம்பினான்.


கண்காட்சிக்கு முதல் நாள், கார்த்திக் தயாரித்து வைத்திருந்த மின்சார கார் மாதிரி எதிர்பாராத விதமாக உடைந்துவிட்டது. கார்த்திக் அழத் தொடங்கினான். அப்போது அங்கே வந்தான் செல்வம். அவன் கடைசி பெஞ்ச் மாணவன், தந்தை ஒரு மெக்கானிக்.


செல்வம் சொன்னான், "கவலைப்படாதே கார்த்திக், இதை நான் சரி பண்ணிடுவேன்." அவன் கையில் இருந்த சின்னச் சின்னக் கருவிகளை வைத்து ஐந்தே நிமிடத்தில் அந்த காரை ஓட வைத்தான்.


கார்த்திக் ஆச்சரியப்பட்டான். "உனக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா?" 


செல்வம் சிரித்துக் கொண்டே சொன்னான், "எனக்கு இங்கிலீஷ்ல எழுதத் தெரியாது கார்த்திக், ஆனா மிஷின் கூட பேசத் தெரியும்!"

 

அன்று மாலை ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. கார்த்திக் எல்லோரையும் அழைத்தான்.


படிப்பாளிகள்: தகவல்களைச் சேகரித்துத் தொகுத்தனர் .

விளையாட்டு வீரர்கள்: கனமான பொருட்களைச் சுமந்து மேடையை அமைத்தனர் .

கலைஞர்கள் (கடைசி பெஞ்ச்): உடைந்த பொருட்களை வைத்து அழகான அலங்காரங்களைச் செய்தனர் 


யாரையும் "நீ படிக்காதவன்" என்றோ, "நீ விளையாட்டுப் பையன்" என்றோ யாரும் ஒதுக்கவில்லை.


போட்டி அன்று, 6-ஏ வகுப்பின் அரங்கு களைகட்டியது. மற்ற வகுப்புகள் தனித்தனியாகச் செய்திருந்தனர். ஆனால் 6-ஏ வகுப்பில்,  அனைவரும் இணைந்து ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு, அந்தக் கலை நிகழ்ச்சியை திறம்பட நடத்திக் காட்டினார்கள்.   அறிவியல் கண்காட்சியும் அனைவரின் ஒத்துழைப்பால் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


‌முடிவில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்னார்: "இந்தக் கோப்பை 6-ஏ வகுப்புக்குத்தான். அவர்கள் செய்த மாடலுக்காக அல்ல, அவர்கள் காட்டிய 'சமூக ஒற்றுமைக்காக'. 


ஒரு சமூகத்தில் ஒருவருக்குத் தெரிந்த கலை, இன்னொருவருக்குத் தெரியாது. ஆனால் எல்லாரும் சேர்ந்தால்தான் அந்தச் சமூகம் முழுமையடையும்! அனைவரும் ஒற்றுமையாக முயன்று செயல்பட்டால் தான் , அச்சமுகம் உண்மையான வளர்ச்சி அடையும்" என்று தலைமை ஆசிரியர்  6ஏ மாணவர்களை புகழ்ந்தார்..


6 ஏ வகுப்பு மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி, தனது சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டனர்.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்