UPSC civil services.. யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு.. இன்று முதல் பிப்.,11 வரை விண்ணப்பிக்கலாம்

Jan 22, 2025,06:22 PM IST

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


ஆண்டுக்கு ஒரு முறை யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான   தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட  பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. இந்த தேர்வின் மூலம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிப்போர் யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://upsc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணபிப்போர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இத்தேர்விற்கு 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரை காலை 9.30 முதல் 11.30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 


தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிப்போர் தங்களது மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி வைத்து மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

news

மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!

news

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா

news

10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்

news

10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!

news

10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!

news

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931

news

The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்