சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025ம் ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது. இந்த தேர்வின் மூலம் 979 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிப்போர் யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான https://upsc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணபிப்போர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்டி,எஸ்சி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இத்தேர்விற்கு 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரை காலை 9.30 முதல் 11.30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிப்போர் தங்களது மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி வைத்து மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}