வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 7 ம் தேதி துவங்கி ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி20 மாநாட்டில் தான் நிச்சயம் கலந்து கொள்ள உள்ளதாக ஜோ பைடன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆவால் அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என வந்துள்ளது.
இருந்தாலும் அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீன அதிபர் ஜின்பிங் மாநாட்டுக்கு வர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதில் அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்கவுள்ளார். ரஷ்ய அதிபரும் வருவது சந்தேகம்தான். இந்த நிலையில் ஜோ பைடன் வருகையிலும் சந்தேகம் எழுந்துள்ளதால் சலசலப்பு நிலவுகிறது.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}