வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 7 ம் தேதி துவங்கி ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி20 மாநாட்டில் தான் நிச்சயம் கலந்து கொள்ள உள்ளதாக ஜோ பைடன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு லேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆவால் அவருக்கு கொரோனா தொற்று நெகடிவ் என வந்துள்ளது.
இருந்தாலும் அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜோ பைடனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீன அதிபர் ஜின்பிங் மாநாட்டுக்கு வர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதில் அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்கவுள்ளார். ரஷ்ய அதிபரும் வருவது சந்தேகம்தான். இந்த நிலையில் ஜோ பைடன் வருகையிலும் சந்தேகம் எழுந்துள்ளதால் சலசலப்பு நிலவுகிறது.
பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்
TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!
ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா
மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}