ஆம்புலன்ஸ் கதவை உடைத்து.. வெளியே குதித்து.. தப்பி ஓடிய அமெரிக்கர்!

Jan 27, 2023,09:20 AM IST

சென்னை:  சென்னையில் காயமடைந்த அமெரிக்கர் ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக முயன்றபோது அவர் ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து வெளியே குதித்து தப்பி ஓடி விட்டார்.


அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் 26 வயதான கியானி மார்செலோ. இவர் தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தார். பெரியமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை 3 மணியளவில் தனது அறைக்குத் திரும்பினார் மார்சலோ. நல்ல குடிபோதையில் அவர் இருந்ததால், அவரை ஹோட்டல் ஊழியர்கள் கைத்தாங்கலாக அறைக்குக் கொண்டு போய் விட்டனர்.


இந்த நிலையில் அன்று நள்ளிரவுக்கு மேல் தலையில் பலத்த காயத்துடன் தனது அறையிலிருந்து ஹோட்டல் லாபிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவர் ஹோட்டல் அறைக்குள் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை அதில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


ஆம்புலன்ஸ் ரிப்பன் பில்டிங்கைத் தாண்டியிருக்கும். திடீரென மார்செலோ ஆம்புலன்ஸ் கண்ணாடிக் கதவை உடைத்து, ஓடும் வண்டியிலிருந்து வெளியே குதித்தார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது அல்லிக்குளம் கோர்ட் வளாக பார்க்கிங் பகுதியில் மார்செலோ பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். தற்போது பலத்த பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்