வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார். அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.
இந்தியர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரையும் கூட அந்த அதிகாரி இப்படித்தான் விஷமத்தனமாக விமர்சித்துள்ளார். யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியே துரத்துவோம் என்றும் அவர் கொக்கரித்துள்ளது இந்தியர்களைக் கொதிக்க வைத்துள்ளது.
டிரம்ப் அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலமாக இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்களை கை, கால்களை விலங்கிட்டு அழைத்து வந்ததாக வெளியான வீடியோ காட்சிகள் அதிர வைத்தன. அவை உண்மையா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் மத்திய அரசு இதுகுறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான். குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.
அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது. இது இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}