வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 1, 2025 முதல், பிராண்டட் (Branded) மற்றும் காப்புரிமை பெற்ற (Patented) மருந்து இறக்குமதிகளுக்கு 100% வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவுக்குப் பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலையை (Manufacturing Plant) அமைக்கும் அல்லது கட்டுமானத்தைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி இல்லை. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு ஏன் பாதிப்பு?

அமெரிக்கா தான் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதி சந்தை. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 31% அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்திய நிறுவனங்களான டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொத்த வருவாயில் 30-50% அமெரிக்காவில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா பயன்படுத்தும் ஜெனெரிக் (Generic) மருந்துகளில் 45%க்கும் மேல் இந்தியாவிலிருந்து செல்கிறது.
தற்போதுள்ள வரி, பிராண்டட் மருந்துகளை மட்டுமே இலக்கு வைத்தாலும், இந்தியாவிலிருந்து செல்லும் சில சிறப்பு மருந்துகளுக்கும் இந்த வரி வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த வரி விதிக்கப்பட்டால், இந்திய நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் மலிவு விலை ஜெனெரிக் மருந்துகள் கிடைக்காமல் விலை உயர்வு (Price Hike) மற்றும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
டிரம்ப், மருந்துகள் தவிர, சமையலறைப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் கனரக லாரிகள் போன்றவற்றுக்கும் 25% முதல் 50% வரை வரியை அதிகரித்துள்ளார்.
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
இன்றைய உலகில் நம் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள சவால்கள்
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
{{comments.comment}}