வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 1, 2025 முதல், பிராண்டட் (Branded) மற்றும் காப்புரிமை பெற்ற (Patented) மருந்து இறக்குமதிகளுக்கு 100% வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவுக்குப் பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலையை (Manufacturing Plant) அமைக்கும் அல்லது கட்டுமானத்தைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி இல்லை. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு ஏன் பாதிப்பு?

அமெரிக்கா தான் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதி சந்தை. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 31% அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்திய நிறுவனங்களான டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொத்த வருவாயில் 30-50% அமெரிக்காவில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா பயன்படுத்தும் ஜெனெரிக் (Generic) மருந்துகளில் 45%க்கும் மேல் இந்தியாவிலிருந்து செல்கிறது.
தற்போதுள்ள வரி, பிராண்டட் மருந்துகளை மட்டுமே இலக்கு வைத்தாலும், இந்தியாவிலிருந்து செல்லும் சில சிறப்பு மருந்துகளுக்கும் இந்த வரி வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த வரி விதிக்கப்பட்டால், இந்திய நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் மலிவு விலை ஜெனெரிக் மருந்துகள் கிடைக்காமல் விலை உயர்வு (Price Hike) மற்றும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
டிரம்ப், மருந்துகள் தவிர, சமையலறைப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் கனரக லாரிகள் போன்றவற்றுக்கும் 25% முதல் 50% வரை வரியை அதிகரித்துள்ளார்.
Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!
தமிழகம் பற்றிய கவர்னரின் கருத்து...மிக கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
TET தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கோடியில் கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ்
மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}