மருந்துகளுக்கு 100 சதவீத வரி.. டிரம்ப்பின் அடுத்த அதிரடி.. இந்தியாவுக்குப் பாதிப்பு வரும்!

Sep 26, 2025,11:50 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 1, 2025 முதல், பிராண்டட் (Branded) மற்றும் காப்புரிமை பெற்ற (Patented) மருந்து இறக்குமதிகளுக்கு 100% வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவுக்குப் பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலையை (Manufacturing Plant) அமைக்கும் அல்லது கட்டுமானத்தைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி இல்லை. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கு ஏன் பாதிப்பு?




அமெரிக்கா தான் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதி சந்தை. இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 31% அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்திய நிறுவனங்களான டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொத்த வருவாயில் 30-50% அமெரிக்காவில் இருந்துதான் வருகிறது. அமெரிக்கா பயன்படுத்தும் ஜெனெரிக் (Generic) மருந்துகளில் 45%க்கும் மேல் இந்தியாவிலிருந்து செல்கிறது.


தற்போதுள்ள வரி, பிராண்டட் மருந்துகளை மட்டுமே இலக்கு வைத்தாலும், இந்தியாவிலிருந்து செல்லும் சில சிறப்பு மருந்துகளுக்கும் இந்த வரி வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த வரி விதிக்கப்பட்டால், இந்திய நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் மலிவு விலை ஜெனெரிக் மருந்துகள் கிடைக்காமல் விலை உயர்வு (Price Hike) மற்றும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.


டிரம்ப், மருந்துகள் தவிர, சமையலறைப் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் கனரக லாரிகள் போன்றவற்றுக்கும் 25% முதல் 50% வரை வரியை அதிகரித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்