டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளது ஈரான். அதேசமயம், போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பாக அது ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது. அதில் இஸ்ரேலில் 7 பேர் உயிரிழந்தனர்.
மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரான் திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் டிரம்ப்பிடமிருந்து ஒரு திடீர் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக TruthSocial-ல் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார் டிரம்ப். மத்திய கிழக்கு அழியாது, கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பாராக என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், ஈரான் வெளியுறவு அப்பாஸ் அராக்சி இதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
எந்த போர் நிறுத்த உடன்பாடும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். அவர் மேலும் கூறுகையில், காலை 4 மணி வரை டெஹ்ரான் பதிலடி கொடுத்தது என்று கூறி, தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தினார். முன்னதாக டிரம்ப் போட்டிருந்த பதிவில், இஸ்ரேலும் ஈரானும் என்னிடம் ஒரே நேரத்தில் வந்து, சமாதானம் என்றனர். இதுதான் சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். உலகமும், மத்திய கிழக்கும் உண்மையான வெற்றியாளர்கள். இரண்டு நாடுகளும் அன்பு, அமைதி மற்றும் வளமான எதிர்காலத்தைக் காணும். அவர்கள் நேர்மை மற்றும் உண்மையிலிருந்து விலகிச் சென்றால் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஈரானின் எதிர்காலம் வரம்பற்றது, மேலும் பெரிய வாக்குறுதிகள் நிறைந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் கூறினார்.
டிரம்ப் கெஞ்சினார் - ஈரான் தகவல்
இதை மறுத்துப் பேசிய அப்பாஸ், போரை ஆரம்பித்தது இஸ்ரேல்தான். நாங்கள்தான் முடிக்க வேண்டும் என்றும் ஈரான் கூறியுள்ளது. தற்போது வரை எந்த போர் நிறுத்த உடன்பாடும் இல்லை. இஸ்ரேல் சட்டவிரோத தாக்குதலை நிறுத்தினால், ஈரான் பதிலடி கொடுக்காது என்றும் அப்பாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக ஈரானும் அறிவித்துள்ளது. அதற்கு முன்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஈரான். அதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு போரை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களிடம் போரை நிறுத்துமாறு கெஞ்சியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் இறங்கிப் போய் போர் நிறுத்தத்திற்கு முயன்றுள்ளதாக கருதப்படுகிறது.
ஈரான் நினைத்ததை விட வீரியமாக இருப்பதையும், ஈரானுக்கு ஆதரவாக உலக நாடுகள் அணி திரள்வதையும் பார்த்த பிறகே அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு தீவிரமாக முயன்றதாக கருதப்படுகிறது. மேலும் அதிபர் டிரம்ப் சமீப காலமாக உலக நாடுகளின் விவகாரங்களில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். இப்படித்தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போதும் கூட அவராகவே வந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி வைத்தேன் என்றார். இப்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப்பே அறிவித்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!
Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!
வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?
மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!
சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!
போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
காவியத்தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற.. கண்ணதாசன்!
{{comments.comment}}