வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார். தேவையில்லாமல் பலரை கொன்று குவிக்கிறார் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விளாடிமிர் புடினை இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் டிரம்ப்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், புடின் தேவையற்ற விதமாக எண்ணற்ற உயிர்களை பலி வாங்குகிறார். ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் எந்தவித காரணமுமின்றி உக்ரைன் நகரங்களின் மீது ஏவப்படுகின்றன என்று சாடியுள்ளார் டிரம்ப்.

சமீப காலமாக புடினுடன் நல்லுறவு நிலுவதாக கூறி வந்தார் டிரம்ப். மேலும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வந்தபோது கூட அவரிடம் தனது கடுமையைக் காட்டியிருந்தார் டிரம்ப். ஆனால் தற்போது புடினை விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளார் டிரம்ப்.
அண்மைக் காலமாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் தனது அதிருப்தியை டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார். உக்ரைனை முழுமையாகக் கைப்பற்ற புடின் முனைந்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்கா ரஷ்யா மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தான் உதவுவதாகவும், இந்தப் போர் "ஒழுங்கீனமான திறமையின்மை மற்றும் வெறுப்பினால்" ஏற்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அதேவேளையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பேச்சுக்களையும் அவர் விமர்சித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
சமீப நாட்களாக ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உக்ரைனில் நடந்த மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
 
                                                                            பீகாரில் 1 கோடி பேருக்கு வேலை.. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்.. தேஜகூ தேர்தல் அறிக்கை
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            நகை வாங்க இதுவே சரியான தருனம்... இன்று தங்கம் வெள்ளி விலையில் எந்தமாற்றமும் இல்லை!
 
                                                                            கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. சூடு பிடித்தது சிபிஐ விசாரணை.. இன்ஸ்பெக்டரிடம் முக்கிய விசாரணை
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 31, 2025... இன்று நினைத்தது நிறைவேறும் ராசிகள்
 
                                                                            இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
 
                                                                            எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
 
                                                                            கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
{{comments.comment}}