ரியாத்: சவுதி அரேபியாவின் அபரிமிதமான மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டிப் பேசியுள்ளார். அதுவும் சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானை ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிகவும் வியந்து பாராட்டி அவர் வாழ்த்தியது பலரையும் கவர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அங்கு சவூதி அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டார். தலைநகர் ரியாத்தில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இளவரசர் முகம்மது பின் சல்மானை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
டிரம்ப் பேசுகையில், முகமது, நீங்கள் இரவில் உறங்குகிறீர்களா? எப்படி உறங்குகிறீர்கள்? என்ன ஒரு வேலை. எங்களில் சிலரைப் போல் இரவெல்லாம் புரண்டு படுக்கிறீர்களா? எப்படி இதை மேம்படுத்தலாம்? என்று சிந்திப்பவர்கள்தான், அதே சிந்தனையில் இருப்பவர்கள்தான் இரவெல்லாம் புரண்டு படுப்பார்கள். புரண்டு படுக்காதவர்கள், ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள்.
விமர்சகர்கள் சவுதியின் வளர்ச்சி சாத்தியமா என்று சந்தேகப்பட்டனர், ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், சவுதி அரேபியா விமர்சகர்களை முற்றிலும் தவறென்று நிரூபித்துள்ளது... எனக்கு சல்மானை மிகவும் பிடிக்கும். அவர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார், அருமையாக உழைக்கிறார் என்றார் டிரம்ப்.
அமெரிக்காவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நீண்ட காலமாக மிக நெருங்கிய உறவு, நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜோ பைடன் காலத்தில் இது லேசான உராய்வைக் கண்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த உறவை வலுப்படுத்தும் வகையில் டிரம்ப்பின் பேச்சு அமைந்துள்ளது. 2வது முறை அதிபரான பின்னர் சவூதிக்கு முதல் வெளிநாட்டுப் பயணமாக டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}