வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைக் கைது செய்வது போலவும், சிறையில் சீருடையில் அடைக்கப்பட்டிருப்பதைப் போலவும் போலியான ஏஐ புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பராக் ஒபாமாவை FBI அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வது போல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் இருந்தன. மேலும் கைதி சீருடையில் ஒபாமா சிறையில் இருப்பது போலவும் அதில் காட்சி உள்ளது. இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியான இந்த வீடியோ, "அதிபர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்" என்று ஒபாமா கூறுவதிலிருந்து தொடங்குகிறது. அதன் பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் "சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை" என்று வருகிறது. அதைத் தொடர்ந்து, ஒபாமா அதிபராக இருந்த அதே அலுவலகத்தில், இரண்டு FBI அதிகாரிகளால் கைவிலங்கு பூட்டப்படுவது போன்ற AI காட்சிகள் வருகின்றன. இந்த "கைது" நடக்கும் போது டிரம்ப் அமர்ந்து சிரிப்பதைப் போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இந்த போலி வீடியோவின் முடிவில், ஒபாமா சிறையில் ஆரஞ்சு நிற கைதி உடையுடன் நிற்பது போலவும் காட்டப்படுகிறது.
இந்த போலியான ஏஐ வீடியோ கடும் கண்டனங்களை சந்தித்துள்ளது. அதிபர் டிரம்ப் பொறுப்பற்ற முறையில் இதை வெளியிட்டுள்ளதாக விமர்சகர்கள் கண்டித்துள்ளனர். அதேசமயம், டிரம்ப் ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}