வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஏற்பட்டது. இந்த போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இந்த சந்திப்பு நடந்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பது போல் பேசிக்கொண்டே இருந்தனர். இதற்கு ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2019ம் ஆண்டில் இருந்து ரஷ்யா போர் செய்து வருகிறது என்று கூறினார்.

இதற்கு டிரம்ப் கூறும் போது, நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் இருந்து நீங்கள் வெற்றி பெறபோவது இல்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கே அவ மரியாதையானது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிடுகின்றனர். உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. 2 வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய போர் இது. நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதை செய்கிறீர்கள். நீங்கள் இவ்வாறு நடத்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை கடினமாக்கும் என்று நான் பயப்படுகின்றேன். உயிர்கள் இழக்காமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகின்றேன். நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}