US Presidential Election 2024: வெல்லப் போவது டிரம்ப்பா.. கமலா ஹாரிஸா?.. விறுவிறு தேர்தலில் அமெரிக்கா

Nov 05, 2024,05:42 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு சூடு பிடித்துள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் தொடங்கிய தேர்தல் தற்போது படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது.


அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நேர பிராந்தியங்கள் இருப்பதால் பகுதி பகுதியாக வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. முதல் வாக்குப் பதிவு நியூ ஹாம்ப்ஷயரில் தொடங்கியது. தற்போது நியூயார்க், கலிபோர்னியா, வர்ஜீனியா, கனக்டிகட், நியூ ஜெர்ஜி ஆகிய மாகாணங்களிலும் தொடங்கியுள்ளது. அடுத்து கென்டகி, இன்டியானா மாகாணங்களில் வாக்குப் பதிவு விரைவில் தொடங்கப் போகிறது. 


முன்னதாக நியூஹாம்ப்ஷயர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தமே 6 வாக்குகள் உள்ள நிலையில் அங்கு டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் சமமான முறையில் வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. டிரம்ப்பும், கமலாவும் தலா 3 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.




அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடந்ததுமே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும். கடந்த தேர்தலில்தான் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். இந்த முறையும் பதட்டம் நீடித்து வருவதால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை டிரம்ப்புக்கும், கமலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 


முன்னதாக தனது 107 நாள் தேர்தல் பிரச்சாரத்தை பென்சில்வேனியாவில் வைத்து கமலாஹாரிஸ் நிறைவு செய்தார். டிரம்ப், மிச்சிகனில் தனது பிரச்சாரத்தை முடித்தார். இதே இடத்தில்தான் தனது 3 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தனது கடைசி கட்ட பிரச்சாரத்தின்போது, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகிய பகுதிகளில் ஓட்டு  வேட்டையாடினார் டிரம்ப். தனது சொந்த ஊரான புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் பகுதியில்தான் டிரம்ப்புக்கு வாக்கு உள்ளது. அங்கு சென்று தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.


மொத்தம் 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்காவில் தொடங்கியுள்ள அதிபர் தேர்தலில்  கிட்டத்தட்ட ஏழரை கோடி பேர் ஏற்கனவே தபால் வாக்குகள் உள்ளிட்ட வடிவங்களில் வாக்களித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்