வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு சூடு பிடித்துள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் தொடங்கிய தேர்தல் தற்போது படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நேர பிராந்தியங்கள் இருப்பதால் பகுதி பகுதியாக வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. முதல் வாக்குப் பதிவு நியூ ஹாம்ப்ஷயரில் தொடங்கியது. தற்போது நியூயார்க், கலிபோர்னியா, வர்ஜீனியா, கனக்டிகட், நியூ ஜெர்ஜி ஆகிய மாகாணங்களிலும் தொடங்கியுள்ளது. அடுத்து கென்டகி, இன்டியானா மாகாணங்களில் வாக்குப் பதிவு விரைவில் தொடங்கப் போகிறது.
முன்னதாக நியூஹாம்ப்ஷயர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தமே 6 வாக்குகள் உள்ள நிலையில் அங்கு டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் சமமான முறையில் வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. டிரம்ப்பும், கமலாவும் தலா 3 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடந்ததுமே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும். கடந்த தேர்தலில்தான் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். இந்த முறையும் பதட்டம் நீடித்து வருவதால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை டிரம்ப்புக்கும், கமலாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முன்னதாக தனது 107 நாள் தேர்தல் பிரச்சாரத்தை பென்சில்வேனியாவில் வைத்து கமலாஹாரிஸ் நிறைவு செய்தார். டிரம்ப், மிச்சிகனில் தனது பிரச்சாரத்தை முடித்தார். இதே இடத்தில்தான் தனது 3 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கடைசி கட்ட பிரச்சாரத்தின்போது, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன் ஆகிய பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினார் டிரம்ப். தனது சொந்த ஊரான புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் பகுதியில்தான் டிரம்ப்புக்கு வாக்கு உள்ளது. அங்கு சென்று தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
மொத்தம் 50 மாகாணங்களைக் கொண்ட அமெரிக்காவில் தொடங்கியுள்ள அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட ஏழரை கோடி பேர் ஏற்கனவே தபால் வாக்குகள் உள்ளிட்ட வடிவங்களில் வாக்களித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}