வாஷிங்டன்: இன்டர்நெட்டின் அதிபயங்கர ஜோதிடர் என்று வர்ணிக்கப்படும் 40 வயதான அமி டிரிப், அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர்தான் என்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். ஜோ பிடன் மீண்டும் போட்டியிட மாட்டார், விலகி விடுவார் என்று இவர் கணித்தது பலித்து விட்டதால், அடுத்த அதிபர் என்று இவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமி டிராப் இன்டர்நெட்டில் பிரபலமாக உள்ளவர். பல்வேறு கணிப்புகளையும், ஆரூடங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது கணிப்புகளில் லேட்டஸ்ட்தான் பிடன் விலகுவார் என்பது. அது பலித்து விட்டதால் இப்போது இவர் பிரபலமாகி விட்டார். அவர் யாரை கை காட்டியுள்ளார் தெரியுமா.. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைத்தான் அடுத்த அதிபர் என்று சொல்கிறார் அமி டிரிப்.
நட்சத்திரங்களின் சேர்க்கைகளை வைத்துப் பார்க்கும்போது டிரம்ப்தான் அடுத்த அதிபராக வருவார் என்று அமி டிரிப் கூறுகிறார். இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தில் டிரம்ப் இருக்கிறார். அவரது அரசியல் பயணத்தில் இப்போதுதான் அவர் புதிய உச்சத்தைப் பெறப் போகிறார். மிகப் பெரிய வெற்றியை அவர் அடைவார். அவர் மீதான கொலை முயற்சி சம்பவம் இதைத்தான் காட்டுகிறது. அவர் மிகப் பெரிய இலக்குடன் களம் இறங்கியுள்ளார். வெல்வார் என்று கூறியுள்ளார் அமி டிரிப்.

பிடன் விலகுவார் என்று கூறிய அமி டிரிப், கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்பதையும் முன்கூட்டியே கூறியிருந்தார். அதுவும் நடந்துள்ளது. ஆனால் கமலா ஹாரிஸுக்கு அதிர்ஷ்டம் கிடையாது என்றும் கணித்துள்ளார் அமி.
இதுதவிர மேலும் சில கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார் அமி டிரிப். ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா கடும் நெருக்கடியை சந்திக்கும். அது அரசியல் நெருக்கடியாக இருக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதிதான் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல் கமலா ஹாரிஸ் அதிரடியாக தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார். தனது செல்வாக்கை உயர்த்தும் வேலைகளிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}