டீச்சருடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட மகன்.. "டிராக்கிங் ஆப்" மூலம் கையும் களவுமாக பிடித்த அம்மா!

Dec 16, 2023,05:06 PM IST

சார்லட், வடக்கு கலிபோர்னியா: அமெரிக்காவில், ஆசிரியையுடன் ரகசிய உறவு வைத்திருந்த  மகனை, டிராக்கிங் ஆப் வைத்து கண்டுபிடித்துள்ளார் அவனது அம்மா.


ரக்பி விளையாடப் போவதாக கூறி விட்டு அடிக்கடி வெளியே போயுள்ளான் மகன். ஆனால் அவன் விளையாடப் போகவில்லை என்று அம்மாவுக்குத் தெரிய வந்து குழப்பமடைந்தார். இதையடுத்து மகன் எங்கே போகிறான் என்பதைக்  கண்டறிய டிராக்கிங் ஆப்பைப் பயன்படுத்தியுள்ளார். அதில்தான் இந்த சில்மிஷம் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.


அவர் பயன்படுத்திய Life360 என்ற டிராக்கிங் ஆப் ஏற்கனவே அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு அறிமுகமான ஆப் இது. 




சம்பந்தப்பட்ட பையனின் வயது 18 ஆகும். அவனுக்கும் அவனது 26 வயதான ஆசிரியைக்கும் இடையே ரகசிய உறவு இருந்துள்ளது. அந்த டீச்சரின் பெயர் கேப்ரியலா கார்தயா நியூபெல்ட். இவர் தெற்கு மெக்கலன்பர்க் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.


இந்தப் பையன் தனது வீட்டில் ரக்பி பயிற்சிக்குப் போவதாக கூறி விட்டு வெளியே போவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் அவன் அங்கு போகவில்லை என்று அவனது அம்மாவுக்குத் தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் டிராக்கிங் ஆப்பைப் பயன்படுத்தி ஒரு நாள் மகனைக் கண்காணித்துள்ளார். அப்போது மகன், பார்க் ரோட் பார்க்குக்குப் போனது தெரிய வந்தது.


உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அங்கு போய்ப் பார்த்தால், அந்த டீச்சருடன் மகன் கசமுசா நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காருக்குள்ளேயே இருவரும் சேட்டையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.  உடனடியாக அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்துள்ளார்.  மேலும் காரையும் போட்டை எடுத்தார். அதன் பிறகு உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்தார்.


விசாரணையின்போது பல்வேறு இடங்களில் வைத்து இருவரும் சந்தித்துக் கொண்டது தெரிய வந்தது. பள்ளி வளாகத்திலும் கூட இவர்கள் கசமுசாவில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  தற்போது அந்த ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்