டெல்லி: அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அவர்களை கை, கால்களில் விலங்கிட்டு கொண்டு வந்ததால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.
எல்லா நாட்டவர்களையும் இப்படித்தான் அனுப்பி வைக்கிறோம், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கிடுவதில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது. மத்திய அரசும் இதேபோன்ற ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை நாடு கடத்தவுள்ளது அமெரிக்கா. இந்த முறை அதிக அளவாக அதாவது 487 இந்தியர்களை அது அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக அறிகிறோம். அவர்களை வெளியேற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று கூறினார்.
மிஸ்ரி மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படும் நாட்டவர்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் மிஸ்ரி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}