டெல்லி: அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அவர்களை கை, கால்களில் விலங்கிட்டு கொண்டு வந்ததால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.
எல்லா நாட்டவர்களையும் இப்படித்தான் அனுப்பி வைக்கிறோம், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கிடுவதில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது. மத்திய அரசும் இதேபோன்ற ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை நாடு கடத்தவுள்ளது அமெரிக்கா. இந்த முறை அதிக அளவாக அதாவது 487 இந்தியர்களை அது அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக அறிகிறோம். அவர்களை வெளியேற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று கூறினார்.
மிஸ்ரி மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படும் நாட்டவர்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் மிஸ்ரி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}