டெல்லி: அமெரிக்காவிலிருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கோரியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அவர்களை கை, கால்களில் விலங்கிட்டு கொண்டு வந்ததால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.
எல்லா நாட்டவர்களையும் இப்படித்தான் அனுப்பி வைக்கிறோம், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கிடுவதில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது. மத்திய அரசும் இதேபோன்ற ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை நாடு கடத்தவுள்ளது அமெரிக்கா. இந்த முறை அதிக அளவாக அதாவது 487 இந்தியர்களை அது அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக அறிகிறோம். அவர்களை வெளியேற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது என்று கூறினார்.
மிஸ்ரி மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்படும் நாட்டவர்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் மிஸ்ரி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}