கனிமொழி கருணாநிதியை.. இதை விட சிறப்பாக அடையாளப்படுத்த முடியாது.. அசத்திய வர்ஷா!

Jan 29, 2023,11:27 AM IST
சென்னை: தான் வரைந்த கோலத்தை அகில உலகுக்கும் கொண்டு சென்று பெருமை சேர்த்த திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதியை வியப்பில் விழிகள் விரிய வைத்து, வாய் நிறைய புன்னகையையும், மனசு நிறைய  மகிழ்ச்சியையும் கொடுத்து அசத்தியுள்ளார் டிசைனர் வர்ஷா (@dabaraset).



கனிமொழி கருணாநிதியின் உருவத்தை, அவரது சிறப்புகளை வைத்தே வரைந்து அசத்தலாக பிரேம் போட்டு கனிமொழியிடம் கொடுத்து வாழ்த்தும் பெற்றுள்ளார் வர்ஷா

சென்னையைச் சேர்ந்தா வர்ஷா ஒரு டிசைனர். உயிர்மெய் என்பது இவரது நிறுவனத்தின் பெயர். எழுத்துக்களை வைத்து வித்தியாசமாக டிசைன் செய்வது இவரது தனிச் சிறப்பு. இவர் சமீபத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை வைத்து ஒரு அழகான கோலம் தீட்டியிருந்தார்.

இந்தக் கோலத்தைக் கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கருணாநிதி. மேலும், எங்களுக்காக இந்த வாழ்த்து கோலத்தை வடிவமைத்து தந்த வர்ஷா (@dabaraset) அவர்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.



இந்த நிலையில் தற்போது கனிமொழி உருவத்தையே சிறப்பாக வரைந்து அவரிடம் கொடுத்து அவரை மகிழ்வித்துள்ளார் வர்ஷா. கனிமொழியின் டிரேட் மார்க் புன்னகையுடன்  கூடியதாக இந்த படம் அமைந்துள்ளது. அதில் ஆங்காங்கே கனிமொழியின் சிறப்புகளையே டிசைனாக புகுத்தியுள்ளார். தலையில் தனித்துவம், இலக்கியம், பகுத்தறிவு ஆகியவற்றைப் பொறித்துள்ளார்.  கண் இமையில் அடையாளம், கண்களில் சேவை இடம் பெற்றுள்ளது.  காதில் கலை இடம் பிடித்துள்ளது. இதழில் கனிவும், சிரிப்பும் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது.  வெற்றி கண்ட போராளி, தலைமை, தமிழ்நாட்டின்  குரல் என்பதும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான முறையில் அமைந்துள்ள இந்த வரைபடத்தை கனிமொழியை நேரில் சந்தித்துக் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் வர்ஷா.  இதுகுறித்து வர்ஷா கூறுகையில், எம்.பி. கனிமொழி அவர்களை நேரில் சந்தித்தேன். அவரது மொழிப் புலமையும், உலகளாவிய பார்வையும் அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாகும். எனது கலை மூலமாக  எனது பிரியத்தை அவரிடம் பகிர்ந்தேன். மறக்கமுடியாத அருமையான அனுபவம் என்று சிலாகித்துள்ளார். இப்போது இந்தப் படமும் வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்