பெங்களூரு: உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பெங்களூர் ஹோட்டலில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா. 37 வயதான இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்திருந்தார். பெங்களூர் வந்திருந்த இவர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஜெகதீஷ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவர் அறையை விட்டு வராமல் இருந்துள்ளார். இதனால் மாலை 4. 30 மணியளவில் ஒரு ஹோட்டல் ஊழியர் போய் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாற்றுக் கீ போட்டுத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜரீனா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூழலைப் பார்க்கும்போது இது கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பவுரிங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில்தான் மரணம் எப்படி சம்பவித்தது என்று தெரிய வரும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}