37 வயசு பெண்.. மாலை 4. 30 மணி இருக்கும்.. கதவைத் தட்டிய ஹோட்டல் ஊழியர்.. அதிர்ச்சியான போலீஸ்!

Mar 14, 2024,06:10 PM IST

பெங்களூரு:  உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 37 வயதுப் பெண் பெங்களூர் ஹோட்டலில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.


உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா. 37 வயதான இவர் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்திருந்தார். பெங்களூர் வந்திருந்த இவர் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஜெகதீஷ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று நீண்ட நேரமாகியும் இவர் அறையை விட்டு வராமல் இருந்துள்ளார். இதனால் மாலை 4. 30 மணியளவில் ஒரு ஹோட்டல் ஊழியர் போய் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே கதவு பூட்டியிருந்தது தெரிய வந்தது.




இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தரப்பட்டது.  போலீஸார் விரைந்து வந்து மாற்றுக் கீ போட்டுத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜரீனா பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சூழலைப் பார்க்கும்போது இது கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்  மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பவுரிங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவில்தான் மரணம் எப்படி சம்பவித்தது என்று தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்