இரு விழிகள்!

Mar 21, 2026,03:27 PM IST

- வே.ஜெயந்தி


மௌனத்தில் பேசிய

வார்த்தைகள் விழிகளில்,

மனதில் மறைந்திருக்கும்

எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.


சொல்ல முடியாத சோகமும்

சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,

ஒரே நேரத்தில் பதியும்

அந்த இரு சிறு உலகங்கள்.




மீன்கள் நீந்தும் நீர்போல்

மிதக்கும் கண்ணீர் துளிகள்,

மனத்தின் ஆழத்தை

மெதுவாக வெளிப்படுத்துகின்றன.


அன்பும் கணிவும் நிரம்பி

அருகில் நிற்கும் போது,

ஆறுதலாய் மாறும்

அந்த இரு விழிகள்.


கோபம் வந்தாலும் கூட

கனிவை மறக்காதவை,

உண்மையை மறைக்காமல்

உள்ளத்தை வெளிப்படுத்தும்.

மனிதன் சொல்வதைக் காட்டிலும்

விழிகள் சொல்வது உண்மை.


இதயம் பேசும் மொழி அது 

பாசத்தின் நிலையான சாட்சி.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்