- வே.ஜெயந்தி
மௌனத்தில் பேசிய
வார்த்தைகள் விழிகளில்,
மனதில் மறைந்திருக்கும்
எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.
சொல்ல முடியாத சோகமும்
சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,
ஒரே நேரத்தில் பதியும்
அந்த இரு சிறு உலகங்கள்.

மீன்கள் நீந்தும் நீர்போல்
மிதக்கும் கண்ணீர் துளிகள்,
மனத்தின் ஆழத்தை
மெதுவாக வெளிப்படுத்துகின்றன.
அன்பும் கணிவும் நிரம்பி
அருகில் நிற்கும் போது,
ஆறுதலாய் மாறும்
அந்த இரு விழிகள்.
கோபம் வந்தாலும் கூட
கனிவை மறக்காதவை,
மனிதன் சொல்வதைக் காட்டிலும்
விழிகள் சொல்வது உண்மை.
இதயம் பேசும் மொழி அது
பாசத்தின் நிலையான சாட்சி.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)
Short Story: நல்ல மருமகள்!
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் தாக்கல்!
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
புன்னகை ப் பூவே
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
Short and Cute story: தோசை பால்!
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்
மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!
{{comments.comment}}