மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!

Aug 11, 2026,10:22 AM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


சின்னப்பொண்ணு வாடி

சேர்ந்திடுவோம் ஜோடி


கன்னத்திலே நீயும் 

முத்தம் ஒன்னு தாடி


வண்ண வண்ண சேலை 

வாங்கி வந்து தாரேன்


உடுத்திக் கிட்டு நீயும் 

ஒய்யாரமாய் வாடி


ஒதடு ரொம்ப செகப்பு 

உதிர்க்குமடி சிரிப்பு


கள்ளம் கபடம் இல்லேயடி 

கண்மணியே உனக்கு




கண் போல பாத்துக்கணும் 

என்னுடைய பொறுப்பு


மாமன் பெத்த மகளே 

மலரும் ரோஜா இதழே


அலை போல 

தவழ்ந்து வந்து 

அள்ளிக் கொள்ளும் முகிலே


ஆழ்கடலில் முத்தே 

ஆலமர வித்தே


அவதாரம் பத்தே 

அடியேனின் சொத்தே


மடைதிறந்த வெள்ளம் 

மகிழ்ச்சியோடு துள்ளும்


மங்கையிவள் மனசு 

மச்சான் பேரே சொல்லும்


கங்கை போல 

பாய்ந்து வந்து 

கண்ணே உந்தன் 

உள்ளம் 


கவர்ந்து கொண்டு 

செல்லுமடி காரிகை யின் இல்லம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

Short and Cute story: தோசை பால்!

news

பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்

news

மங்கையிவள் மனசு மச்சான் பேரே சொல்லும்!

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்