- வே. ஜெயந்தி
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை,
நேரம் சென்றாலும் அது நிழலாய் நிற்கும்.
சொல்லாத வார்த்தைகள் பல இருந்தாலும்,
சொந்தம் கொண்ட பாசம் என்றும் குறையாது.

சிரிப்பில் தொடங்கிய அந்த இணைப்பு,
சோதனைகளில் மேலும் வலுப்படும்.
தொலைவு வந்தாலும் தளராத பந்தம்,
தோளாக நின்று துணை நிற்கும்.
நாள்கள் மாறினாலும் நினைவுகள் மாறாது,
நட்பு விதைத்தால் வாழ்க்கை மலர்கிறது.
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை
நிலைக்கும் செல்வம் அது, நிஜமான வரம் அது.
காலம் கடந்தாலும் காயம் மறையும்,
கனிவான அன்பால் உலகம் நிறையும்.
உயிரின் துடிப்பாய் உறவுகள் இருந்தால்,
உண்மைப் பயணம் இனிதே தொடரும்!
(வே. ஜெயந்தி, செங்கல்பட்டு)
மலாய் மட்டன் கோஃப்தா.. செம டேஸ்ட்டி.. சாப்பிட்டா சூப்பர் திருப்தி!
மே 18.. மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் பயங்கரம்!
The Terrace That Stored Our Summers.. வெயில் மட்டுமல்ல.. நினைவுகளும்!
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
{{comments.comment}}