சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது பாணியில் கவிதாஞ்சலி செய்துள்ளார்.
இதுதொடர்பாக வைரமுத்து எழுதிய கவிதை:

பேரன்பு பேராற்றல்
இரண்டின் கூட்டுவடிவம்
வாஜ்பாய்
கொள்கையில் தலைவன்
குணத்தில் குழந்தை
அவர்
பிரதமராக இருந்தபொழுது
இந்தியிலிருந்து
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட
அவரது கவிதை நூலை
பிரதமர் இல்லத்தில்
வெளியிட்டுப் பேசினேன்
“நீங்கள் விரும்பினால்
என்றேனும் ஒருநாள்
முன்னாள் பிரதமர் ஆகலாம்;
ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்
முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”
என்றேன்
“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்
அங்கே எனக்கு
இருக்கையிட இடமிருக்காது”
என்ற அவரது கவிதையை
மேற்கோள் காட்டினேன்
பின்னொரு சந்திப்பில்
இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட
என் கவிதைகளை
என் தலைக்கு மேல்
தங்க நாணயங்கள்
சிதறிய தருணம் அது
இன்று
நூற்றாண்டு காணும் நாயகரே!
பல நூற்றாண்டுகள்
நினைக்கப்படுவீர்
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!
முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி
கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு
PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!
எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!
{{comments.comment}}