சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது பாணியில் கவிதாஞ்சலி செய்துள்ளார்.
இதுதொடர்பாக வைரமுத்து எழுதிய கவிதை:

பேரன்பு பேராற்றல்
இரண்டின் கூட்டுவடிவம்
வாஜ்பாய்
கொள்கையில் தலைவன்
குணத்தில் குழந்தை
அவர்
பிரதமராக இருந்தபொழுது
இந்தியிலிருந்து
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட
அவரது கவிதை நூலை
பிரதமர் இல்லத்தில்
வெளியிட்டுப் பேசினேன்
“நீங்கள் விரும்பினால்
என்றேனும் ஒருநாள்
முன்னாள் பிரதமர் ஆகலாம்;
ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்
முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”
என்றேன்
“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்
அங்கே எனக்கு
இருக்கையிட இடமிருக்காது”
என்ற அவரது கவிதையை
மேற்கோள் காட்டினேன்
பின்னொரு சந்திப்பில்
இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட
என் கவிதைகளை
என் தலைக்கு மேல்
தங்க நாணயங்கள்
சிதறிய தருணம் அது
இன்று
நூற்றாண்டு காணும் நாயகரே!
பல நூற்றாண்டுகள்
நினைக்கப்படுவீர்
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}