அந்த நிலாவத்தான்.. நாம கையில புடிச்சோம்.. வைரமுத்து செம குஷி .. வாழ்த்து!

Aug 23, 2023,07:04 PM IST

சென்னை:  கவிப்பேரரசு வைரமுத்து, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியையும், விக்ரம் லேண்டர் அற்புதமாக நிலவில் தரையிறங்கியதையும் வரவேற்று ஒரு அழகிய கவிதையை வடித்துள்ளார்.




இதுதொடர்பாக வைரமுத்து எழுதியுள்ள கவிதை:


பூமிக்கும் நிலவுக்கும்

விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது

இந்தியா


ரஷ்யா அமெரிக்கா சீனா 

என்ற வரிசையில்

இனி இந்தியாவை எழுதாமல்

கடக்க முடியாது


இஸ்ரோ விஞ்ஞானிகளின்

கைகளைத் தொட்டுக்

கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்


இது மானுட வெற்றி


அந்த நிலாவத்தான்

நாம கையில புடிச்சோம்

இந்த லோகத்துக்காக 


இது போதாது

நிலா வெறும் துணைக்கோள்

நாம் வெற்றி பெற - ஒரு

விண்ணுலகமே இருக்கிறது என்று வைரமுத்து தனது கவிதையில் கூறியுள்ளார்.


நேற்றும் கூட வைரமுத்து ஒரு நிலவுக் கவிதையை படைத்திருந்தார். இதுவும் சந்திரயான் விண்கலகத்துக்காகத்தான். அதில் அவர் கூறியிருந்ததாவது:


நேரம் நெருங்க நெருங்க

மூளைக்குள் வட்டமடிக்கிறது

சந்திரயான்


நிலவில் அது

மெல்லிறக்கம் கொள்ளும்வரை

நல்லுறக்கம் கொள்ளோம்


லூனா நொறுங்கியது

ரஷ்யாவின் தோல்வியல்ல;

விஞ்ஞானத் தோல்வி


சந்திரயான் வெற்றியுறின்

அது இந்திய வெற்றியல்ல;

மானுட வெற்றி


ஹே சந்திரயான்!

நிலவில் நீ மடியேறு

நாளை நாங்கள் குடியேற என்று ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார் வைரமுத்து.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்