கலையின் கவிதைகள்.. காதலே வாழ்க!

Feb 14, 2025,11:58 AM IST

- கவிஞாயிறு  இரா. கலைச்செல்வி


இது மனிதனின்  மாய  உணர்வு .!!

இது உயிர்களின் உள்மூச்சு...!!

இது  உலகின் புரியாத புதிர்..!!

இது  இதயத்தின் இதமான தாலாட்டு..!!


இது அற்புதமான உணர்வுகளின் சங்கமம்...!!

இது ஒரு  மாபெரும் மாய சக்தி ...!!

இது நதி போல் பாய்ந்து கடலாய் முடியும்..!!

இது அன்பைவிதைத்து அன்பைஅறுவடை செய்யும்..!!


இரண்டு இதயத்தினை இணைக்கும்  இழை..!!

இதயத்தை வருடும் இதமான தென்றல்..!!

இன்பம்துன்பம்  நிறைந்த இனிய  பயணம்..!!

இருமனம் இணைந்து ஒருமனமாகும் நேசம்..!!




சில நேரங்களில் வசந்தகாலம், பூத்து குலுங்கும் ..!!

சில நேரங்களில் கோடைகாலம் ,வெந்து தனியும்..!!

சில நேரங்களில் மழை காலம் ,கண்ணீர் சிந்தும்..!!

சில நேரங்களில்  பனிக்காலம்,  நடுங்க வைக்கும் .!!


உண்மை காதல் தீயவனை நல்லவனாக்கும்..!!

உண்மை காதல் காதலையே பழி கொடுக்கும்..!!

உண்மை காதல் எதிலும்  உறுதுணையாய் நிற்கும்..!!

உண்மைகாதல்  மரணம்வரை நேசிக்கவைக்கும்..!!


ஒருவர் உணர்வை ஒருவர் என்றும் மதித்தலும் ,

ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையும்,

விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமே.,

காதல் வெற்றிக்கான ரகசியங்கள் ...!!!


காதலே வாழ்க..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்