கலையின் கவிதைகள்.. காதலே வாழ்க!

Feb 14, 2025,11:58 AM IST

- கவிஞாயிறு  இரா. கலைச்செல்வி


இது மனிதனின்  மாய  உணர்வு .!!

இது உயிர்களின் உள்மூச்சு...!!

இது  உலகின் புரியாத புதிர்..!!

இது  இதயத்தின் இதமான தாலாட்டு..!!


இது அற்புதமான உணர்வுகளின் சங்கமம்...!!

இது ஒரு  மாபெரும் மாய சக்தி ...!!

இது நதி போல் பாய்ந்து கடலாய் முடியும்..!!

இது அன்பைவிதைத்து அன்பைஅறுவடை செய்யும்..!!


இரண்டு இதயத்தினை இணைக்கும்  இழை..!!

இதயத்தை வருடும் இதமான தென்றல்..!!

இன்பம்துன்பம்  நிறைந்த இனிய  பயணம்..!!

இருமனம் இணைந்து ஒருமனமாகும் நேசம்..!!




சில நேரங்களில் வசந்தகாலம், பூத்து குலுங்கும் ..!!

சில நேரங்களில் கோடைகாலம் ,வெந்து தனியும்..!!

சில நேரங்களில் மழை காலம் ,கண்ணீர் சிந்தும்..!!

சில நேரங்களில்  பனிக்காலம்,  நடுங்க வைக்கும் .!!


உண்மை காதல் தீயவனை நல்லவனாக்கும்..!!

உண்மை காதல் காதலையே பழி கொடுக்கும்..!!

உண்மை காதல் எதிலும்  உறுதுணையாய் நிற்கும்..!!

உண்மைகாதல்  மரணம்வரை நேசிக்கவைக்கும்..!!


ஒருவர் உணர்வை ஒருவர் என்றும் மதித்தலும் ,

ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையும்,

விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமே.,

காதல் வெற்றிக்கான ரகசியங்கள் ...!!!


காதலே வாழ்க..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்