கலையின் கவிதைகள்.. காதலே வாழ்க!

Feb 14, 2025,11:58 AM IST

- கவிஞாயிறு  இரா. கலைச்செல்வி


இது மனிதனின்  மாய  உணர்வு .!!

இது உயிர்களின் உள்மூச்சு...!!

இது  உலகின் புரியாத புதிர்..!!

இது  இதயத்தின் இதமான தாலாட்டு..!!


இது அற்புதமான உணர்வுகளின் சங்கமம்...!!

இது ஒரு  மாபெரும் மாய சக்தி ...!!

இது நதி போல் பாய்ந்து கடலாய் முடியும்..!!

இது அன்பைவிதைத்து அன்பைஅறுவடை செய்யும்..!!


இரண்டு இதயத்தினை இணைக்கும்  இழை..!!

இதயத்தை வருடும் இதமான தென்றல்..!!

இன்பம்துன்பம்  நிறைந்த இனிய  பயணம்..!!

இருமனம் இணைந்து ஒருமனமாகும் நேசம்..!!




சில நேரங்களில் வசந்தகாலம், பூத்து குலுங்கும் ..!!

சில நேரங்களில் கோடைகாலம் ,வெந்து தனியும்..!!

சில நேரங்களில் மழை காலம் ,கண்ணீர் சிந்தும்..!!

சில நேரங்களில்  பனிக்காலம்,  நடுங்க வைக்கும் .!!


உண்மை காதல் தீயவனை நல்லவனாக்கும்..!!

உண்மை காதல் காதலையே பழி கொடுக்கும்..!!

உண்மை காதல் எதிலும்  உறுதுணையாய் நிற்கும்..!!

உண்மைகாதல்  மரணம்வரை நேசிக்கவைக்கும்..!!


ஒருவர் உணர்வை ஒருவர் என்றும் மதித்தலும் ,

ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள நம்பிக்கையும்,

விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலுமே.,

காதல் வெற்றிக்கான ரகசியங்கள் ...!!!


காதலே வாழ்க..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்