- தேவி
அவளின் மெளனமான பார்வையை
மனது அறியும்
சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை
இதயத் துடிப்பு அறியும்
வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை
மூச்சுக்காற்று அறியும்
நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும் இதயத்தை
என் உயிரோசை அறியும்
வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை
பார்வையின் தீண்டல் அறியும்
இமைகளின் பாஷைகளை
இதழ்மணம் அறியும்
கருங் கூந்தலின் சிரிப்பினை
கன்னக்குழியின் அழகறியும்
மேகத்தின் வருகையை
காற்று அறியும்

விரல் நுனியின் தேடலை
மனதின் மெளனங்கள் அறியும்
காற்றின் வேகத்தை திசை அறியும்
திருடிய பார்வையை
இதழ் பூக்கள் அறியும்
களைந்த போன கனவை
கண் மையின் ஓவியம் அறியும்
உன் காதலின் மெளனத்தை
என் மனம் அறியும்
மலரின் மணத்தை வண்டு அறியும்
பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்
இதயத்தின் பாஷைகளை
இதழ்தேன் அறியும்
கற்பனையின்
நினைவு அலையை
கனவு அறியும்
உனக்காக ஏங்கும்
மனத்தை
காலம் அறியும்
உன் வாசனையை
என் மனம் அறியும்
உன் தேடலை
என் தேவை அறியும்
மண்ணின் மகிமையை
வேர் அறியும்
உன் மனத்தின் இனிமையை
என் பெண்மை அறியும்
மனத்தின் காதல் ஜாடைகளை
பார்வை அறியும்!
மழையின் இனிமையை
மரம் அறியும்
உன் மனத்தின் ஊடலை
என் மெளனம் அறியும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}