- தேவி
அவளின் மெளனமான பார்வையை
மனது அறியும்
சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை
இதயத் துடிப்பு அறியும்
வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை
மூச்சுக்காற்று அறியும்
நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும் இதயத்தை
என் உயிரோசை அறியும்
வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை
பார்வையின் தீண்டல் அறியும்
இமைகளின் பாஷைகளை
இதழ்மணம் அறியும்
கருங் கூந்தலின் சிரிப்பினை
கன்னக்குழியின் அழகறியும்
மேகத்தின் வருகையை
காற்று அறியும்

விரல் நுனியின் தேடலை
மனதின் மெளனங்கள் அறியும்
காற்றின் வேகத்தை திசை அறியும்
திருடிய பார்வையை
இதழ் பூக்கள் அறியும்
களைந்த போன கனவை
கண் மையின் ஓவியம் அறியும்
உன் காதலின் மெளனத்தை
என் மனம் அறியும்
மலரின் மணத்தை வண்டு அறியும்
பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்
இதயத்தின் பாஷைகளை
இதழ்தேன் அறியும்
கற்பனையின்
நினைவு அலையை
கனவு அறியும்
உனக்காக ஏங்கும்
மனத்தை
காலம் அறியும்
உன் வாசனையை
என் மனம் அறியும்
உன் தேடலை
என் தேவை அறியும்
மண்ணின் மகிமையை
வேர் அறியும்
உன் மனத்தின் இனிமையை
என் பெண்மை அறியும்
மனத்தின் காதல் ஜாடைகளை
பார்வை அறியும்!
மழையின் இனிமையை
மரம் அறியும்
உன் மனத்தின் ஊடலை
என் மெளனம் அறியும்
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!
என் வலிமை!
கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!
மனைவி!
{{comments.comment}}