- தேவி
அவளின் மெளனமான பார்வையை
மனது அறியும்
சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை
இதயத் துடிப்பு அறியும்
வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை
மூச்சுக்காற்று அறியும்
நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும் இதயத்தை
என் உயிரோசை அறியும்
வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை
பார்வையின் தீண்டல் அறியும்
இமைகளின் பாஷைகளை
இதழ்மணம் அறியும்
கருங் கூந்தலின் சிரிப்பினை
கன்னக்குழியின் அழகறியும்
மேகத்தின் வருகையை
காற்று அறியும்

விரல் நுனியின் தேடலை
மனதின் மெளனங்கள் அறியும்
காற்றின் வேகத்தை திசை அறியும்
திருடிய பார்வையை
இதழ் பூக்கள் அறியும்
களைந்த போன கனவை
கண் மையின் ஓவியம் அறியும்
உன் காதலின் மெளனத்தை
என் மனம் அறியும்
மலரின் மணத்தை வண்டு அறியும்
பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்
இதயத்தின் பாஷைகளை
இதழ்தேன் அறியும்
கற்பனையின்
நினைவு அலையை
கனவு அறியும்
உனக்காக ஏங்கும்
மனத்தை
காலம் அறியும்
உன் வாசனையை
என் மனம் அறியும்
உன் தேடலை
என் தேவை அறியும்
மண்ணின் மகிமையை
வேர் அறியும்
உன் மனத்தின் இனிமையை
என் பெண்மை அறியும்
மனத்தின் காதல் ஜாடைகளை
பார்வை அறியும்!
மழையின் இனிமையை
மரம் அறியும்
உன் மனத்தின் ஊடலை
என் மெளனம் அறியும்
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}