- தேவி
அவளின் மெளனமான பார்வையை
மனது அறியும்
சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை
இதயத் துடிப்பு அறியும்
வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை
மூச்சுக்காற்று அறியும்
நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும் இதயத்தை
என் உயிரோசை அறியும்
வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை
பார்வையின் தீண்டல் அறியும்
இமைகளின் பாஷைகளை
இதழ்மணம் அறியும்
கருங் கூந்தலின் சிரிப்பினை
கன்னக்குழியின் அழகறியும்
மேகத்தின் வருகையை
காற்று அறியும்

விரல் நுனியின் தேடலை
மனதின் மெளனங்கள் அறியும்
காற்றின் வேகத்தை திசை அறியும்
திருடிய பார்வையை
இதழ் பூக்கள் அறியும்
களைந்த போன கனவை
கண் மையின் ஓவியம் அறியும்
உன் காதலின் மெளனத்தை
என் மனம் அறியும்
மலரின் மணத்தை வண்டு அறியும்
பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்
இதயத்தின் பாஷைகளை
இதழ்தேன் அறியும்
கற்பனையின்
நினைவு அலையை
கனவு அறியும்
உனக்காக ஏங்கும்
மனத்தை
காலம் அறியும்
உன் வாசனையை
என் மனம் அறியும்
உன் தேடலை
என் தேவை அறியும்
மண்ணின் மகிமையை
வேர் அறியும்
உன் மனத்தின் இனிமையை
என் பெண்மை அறியும்
மனத்தின் காதல் ஜாடைகளை
பார்வை அறியும்!
மழையின் இனிமையை
மரம் அறியும்
உன் மனத்தின் ஊடலை
என் மெளனம் அறியும்
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}