- தேவி
அவளின் மெளனமான பார்வையை
மனது அறியும்
சிணுங்கி சிறகடிக்கும் கொலுஸின் ஓசையை
இதயத் துடிப்பு அறியும்
வெட்கப்பட்டு தலைகுனியும் வளையலின் இசையை
மூச்சுக்காற்று அறியும்
நொடிக்கு நூறுமுறை ஒளிந்து பார்க்கும் இதயத்தை
என் உயிரோசை அறியும்
வானவில்லின் வண்ணங்களை தோற்கடிக்கும் அவளின் எண்ணங்களை
பார்வையின் தீண்டல் அறியும்
இமைகளின் பாஷைகளை
இதழ்மணம் அறியும்
கருங் கூந்தலின் சிரிப்பினை
கன்னக்குழியின் அழகறியும்
மேகத்தின் வருகையை
காற்று அறியும்

விரல் நுனியின் தேடலை
மனதின் மெளனங்கள் அறியும்
காற்றின் வேகத்தை திசை அறியும்
திருடிய பார்வையை
இதழ் பூக்கள் அறியும்
களைந்த போன கனவை
கண் மையின் ஓவியம் அறியும்
உன் காதலின் மெளனத்தை
என் மனம் அறியும்
மலரின் மணத்தை வண்டு அறியும்
பார்வையின் ஈரத்தை இதயத்தின் உணர்வறியும்
இதயத்தின் பாஷைகளை
இதழ்தேன் அறியும்
கற்பனையின்
நினைவு அலையை
கனவு அறியும்
உனக்காக ஏங்கும்
மனத்தை
காலம் அறியும்
உன் வாசனையை
என் மனம் அறியும்
உன் தேடலை
என் தேவை அறியும்
மண்ணின் மகிமையை
வேர் அறியும்
உன் மனத்தின் இனிமையை
என் பெண்மை அறியும்
மனத்தின் காதல் ஜாடைகளை
பார்வை அறியும்!
மழையின் இனிமையை
மரம் அறியும்
உன் மனத்தின் ஊடலை
என் மெளனம் அறியும்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
D. Brinda Wins Award in Creativity Category at Puthiya thalaimurai and kanavasiriyar Teacher Awards
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
{{comments.comment}}