சென்னை: வந்தே பாரத் விரைவு ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் வந்தே பாரத் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு இந்த சேவை மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குறைந்த நேரத்தில் விரைவாக பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வதையே விரும்பி வருகின்றனர்.
இருப்பினும் அவ்வப்போது ரயில்களில் வழங்கப்படும் உணவு தரக்குறைவாக இருப்பதால் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உணவு வழங்கிய ஊழியர்களை வரவழைத்து பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டனர். முன்னதாக ரயிலில் காலையில் வழங்கிய அதே சாம்பார் சாதத்தை தான் பயணிகள் உண்டுள்ளனர். அதில் உள்ள வண்டுகளை கடுகு என நினைத்து பயணிகள் சாப்பிட்டதாக தெரிகிறது.
அதிக கட்டணத்தில் இந்த ரயிலில் பயணிகள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட தரக்குறைவான உணவு வழங்குவதை அதிகாரிகள் தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தரக்குறைவான உணவை வழங்கிய காண்டிராக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}