வந்தே பாரத் ரயில் சாம்பாரில் வண்டு.. நெல்லை டூ சென்னை பயணத்தின்போது பயணிகள் அதிர்ச்சி!

Nov 16, 2024,07:16 PM IST

சென்னை: வந்தே பாரத் விரைவு ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்திய ரயில்வே துறையின் கீழ் வந்தே பாரத் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு இந்த சேவை மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குறைந்த நேரத்தில் விரைவாக பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வதையே விரும்பி வருகின்றனர். 

இருப்பினும் அவ்வப்போது ரயில்களில் வழங்கப்படும் உணவு தரக்குறைவாக இருப்பதால் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 




இதையடுத்து உணவு வழங்கிய ஊழியர்களை வரவழைத்து பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஊழியர்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டனர். முன்னதாக ரயிலில் காலையில் வழங்கிய அதே சாம்பார் சாதத்தை தான் பயணிகள் உண்டுள்ளனர். அதில் உள்ள வண்டுகளை கடுகு என நினைத்து பயணிகள் சாப்பிட்டதாக தெரிகிறது.


அதிக கட்டணத்தில் இந்த ரயிலில் பயணிகள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட தரக்குறைவான உணவு வழங்குவதை அதிகாரிகள் தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தரக்குறைவான உணவை வழங்கிய காண்டிராக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புறக்கணிப்பின் உச்சமும், ஒப்பீட்டின் வன்மமும்.. ராமநாதபுரம் கொடூரக் கொலையின் உளவியல் பின்னணி!

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்