வந்தே பாரத் ரயில் சாம்பாரில் வண்டு.. நெல்லை டூ சென்னை பயணத்தின்போது பயணிகள் அதிர்ச்சி!

Nov 16, 2024,07:16 PM IST

சென்னை: வந்தே பாரத் விரைவு ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்திய ரயில்வே துறையின் கீழ் வந்தே பாரத் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு இந்த சேவை மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குறைந்த நேரத்தில் விரைவாக பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் இந்த விரைவு ரயிலில் பயணம் செய்வதையே விரும்பி வருகின்றனர். 

இருப்பினும் அவ்வப்போது ரயில்களில் வழங்கப்படும் உணவு தரக்குறைவாக இருப்பதால் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நெல்லையிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் வண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 




இதையடுத்து உணவு வழங்கிய ஊழியர்களை வரவழைத்து பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஊழியர்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டனர். முன்னதாக ரயிலில் காலையில் வழங்கிய அதே சாம்பார் சாதத்தை தான் பயணிகள் உண்டுள்ளனர். அதில் உள்ள வண்டுகளை கடுகு என நினைத்து பயணிகள் சாப்பிட்டதாக தெரிகிறது.


அதிக கட்டணத்தில் இந்த ரயிலில் பயணிகள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட தரக்குறைவான உணவு வழங்குவதை அதிகாரிகள் தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தரக்குறைவான உணவை வழங்கிய காண்டிராக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

news

பெருந்தலைவர் காமராஜர்.. விருதுநகர் மண்ணில் வீரம் முளைத்த நாள் !

news

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்

news

நண்பனே வாழ்க பல்லாண்டு!

news

சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

news

The candle of my life.. என் வாழ்க்கையின் மெழுகுவர்த்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்