தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி நோண்பு!

Aug 25, 2023,10:20 AM IST
சென்னை : செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் வரலட்சுமி விரதமாகும். லட்சுமி தேவியை 16 வகை செல்வங்களை தரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படும் எட்டு ரூபங்களில் வழிபடுவது வழக்கம். இந்த அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்கு அழைத்து, பூனை செய்து வழிபட்டு, நிரந்தரமாக அவர்கள் நம்முடைய வீட்டிலேயே தங்கி இருந்து, அருள் செய்யும் படி வேண்டிக் கொள்ளும் ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும்.

வரலட்சுமி விரதத்தை சுமங்கலி விரதம் என்றும், மகாலட்சுமி விரதம் என்றும் பல பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. இந்த நாளில் திருமணமான பெண்கள், தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கும், குடும்பம், குழந்தைகள் சுபிட்சமாக இருப்பதற்காகவும் வேண்டிக் கொண்டு, விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். திருமணமாகாத பெண்கள், நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள். வரலட்சுமி விரதத்தை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.



வரலட்சுமி விரதம் பொதுவாக ஆடி மாதம் வளர்பிறையில் வரும் நவமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் ஆடி மாதத்தில் இரண்ட அமாவாசை வரும் ஆண்டுகளில் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட்  25 ம் தேதியான இன்று அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் சுக்கிர ஹோரை நேரமாக 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பூஜை செய்து வழிபடலாம். இன்று 10.30 முதல் 12 மணி வரையிலான நேரம் ராகு காலம் என்பதால், 10.30 மணிக்கு முன்பாக பூஜையை நிறைவு செய்து விட வேண்டும்.

வரலட்சுமி விரதம் இரண்ட வகையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒன்று கலசம் அமைத்து, அதில் மகாலட்சுமியை அலங்கரித்து, எழுந்தருளச் செய்து, பூஜை செய்து வழிபடலாம். மற்றொன்று முறையில் கலசம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லாதவர்கள், மகாலட்சுமியில் படத்தை வைத்து நெய் தீபமேற்றி, சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், பருப்பு பாயசம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம் ஆகிய ஸ்லோகங்களை சொல்லி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

மஞ்சள் நூல் அல்லது கயிற்றில் மத்தியில் இரண்டு பூக்களைக் கட்டி, மகாலட்சுமி முன் வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த கயிற்றை கணவர் அல்லது வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்கள் கையால் கட்டிக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் மனம் மகிழும் பூஜை செய்து, எப்போதும் எங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்