சென்னை: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உளவுத்துறை படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பயங்கவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஹபீஸ் சயீத்தின் லஷ்கர் இ தொய்பா வின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், காஷ்மீரில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. அங்கு பயங்கரவாதமே இல்லை. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சுற்றுலா சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}