சென்னை: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உளவுத்துறை படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பயங்கவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஹபீஸ் சயீத்தின் லஷ்கர் இ தொய்பா வின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், காஷ்மீரில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. அங்கு பயங்கரவாதமே இல்லை. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சுற்றுலா சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
இன்றைய உலகில் நம் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள சவால்கள்
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Idli Podi: இட்லி பொடி.. சுவையான பாரம்பரிய முறையில் எப்படி தயாரிக்கலாம்?
நிழல் மறைந்த நாள்.. தேவகோட்டை மாணவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு!
வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!
Kalaiarasi Poem: ஆசை !
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026
{{comments.comment}}