தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

Apr 01, 2025,06:22 PM IST

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியது நகைச்சுவையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித்ஷாவுக்கே தெரியும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலே வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா கூறி இருப்பார். தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்கட்சிகள் தமிழகத்தில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 


அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிய கட்சி தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்யும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது, அதிமுக, பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக தான் இரண்டாவது பெரிய கட்சி என்று கூறியுள்ளார். எனவே பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.




இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை வட இந்தியாவோடு  பார்ப்பதில்லை. அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவோடு தான் இருக்கிறது. தாய்மொழி உணர்வு இப்போதுதான் தமிழகத்தை தாண்டி பலருக்கு உருவாகி வருகிறது. இந்தி திணைப்பை அவர்கள் இதுவரை ஒரு எதிரான நடவடிக்கையாகவே பார்க்காமல் இருந்துவிட்டனர். 


அதனால், வட இந்தியாவில் மக்கள் பேசிய பல மொழிகள் அழிந்து போய் இருக்கின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூட தங்களது தாய் மொழி இந்தியால் அழிக்கப்பட்டுவிட்டது என்று சட்ட மன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் தமிழகம் தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பது முக்கியம். இப்போது வெவ்வேறு மாநிலங்கள் உள்ள மக்களுக்கு புரிய தொடங்கி இருக்கின்றது.


பாஜகவும்,அதிமுகவும் பொருந்தாக் கூட்டணி. அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்பட்ட கூட்டணியே தவிர, கொள்கைகளில் ஒருமித்த பார்வையில்லை. மற்ற கட்சிகளுக்கு இடையே இருக்கும் கூட்டணி பொருந்தா கூட்டணி என்று  கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்