வேளாங்கண்ணி: புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயம் உலகப் புகழ் பெற்றது. மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்தவரும் இங்கு வந்து வணங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இங்கு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஆரோக்கிய மாத திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்
வேளாங்கண்ணியில் நேற்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய தங்குமிடம், குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேர் வேளாங்கண்ணிக்குப் பயணப்படுவார்கள் என்பதால் சிறப்பான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}