வேளாங்கண்ணி: புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயம் உலகப் புகழ் பெற்றது. மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்தவரும் இங்கு வந்து வணங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் இங்கு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஆரோக்கிய மாத திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்
வேளாங்கண்ணியில் நேற்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய தங்குமிடம், குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேர் வேளாங்கண்ணிக்குப் பயணப்படுவார்கள் என்பதால் சிறப்பான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}