1 லட்சம் விதைப் பந்துகள்.. வேலூரை அசத்தும் பசுமைத் தமிழன்!

Aug 13, 2023,09:54 AM IST
வேலூர்: வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரவணன் மற்றும் அவரது குழுவினர்  வருடா வருடம் ஒரு சூப்பரான வேலையைச் செய்து கொண்டுள்ளனர். இந்த வருடமும் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

பசுமையான இந்த பூமியை எந்த அளவுக்கு பொசுக்கி நசுக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்து விட்டார்கள் மனிதர்கள். உலகம் உருவானபோது அது எப்படி இருந்ததோ அதற்கு நேர் மாறாக இன்று புகை மண்டலத்திலும், மாசுக்களிலும், வறட்சியிலும் சிக்கித் தவித்து அழிந்து கொண்டுள்ளது.



குடித்த சுத்தமான தண்ணீர் இல்லை, சுவாசிக்க நல்ல காற்று இல்லை, நிம்மதியாக இருக்க முடியாத அளவுக்கு நமது பூமியை நாம் பாழ் செய்து வருகிறோம். எங்கெங்கும் சுற்றுப்புற சீர்கேடுகள் மலிந்து விட்டன. காற்று மாசு ஒலி மாசு என எல்லா மாசுக்களையும் ஏற்படுத்தி விட்டோம். ஓஸோன் மண்டலம் மேலும் மேலும் பலவீனமடைந்து உடைந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக வரலாறு காணாத வறட்சிகளை  ஒரு பக்கம் சந்திக்கும் பூமி, மறுபக்கம் மிகப் பெரிய பேரழிவு வெள்ளங்களையும் காணும் அவல நிலை உள்ளது. இப்போதும் கூட சுதாரிக்காவிட்டால் பூமியை நாம் நிச்சயம் விரைவிலேயே அழித்து விடுவோம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஆங்காங்கே பலரும் தனித் தனியாக இதற்காக குரல் கொடுத்து தங்களால் முடிந்ததைச் செய்து வருகிறார்கள்.



அந்த வரிசையில்,  வேலூரைச் சேர்ந்த தினேஷ் சரணவன் என்பவர் ஆண்டுதோறும் விதைப் பந்துகளை தயாரித்து அதை மலைப் பகுதிகளில் வன வளத்தைப் பெருக்க முயன்று வருகிறார். இந்த வருடமும் 1 லட்சம் விதைப் பந்துகளை இவரது டீம் உருவாக்கவுள்ளது.  காட்டுவாகை, சரக்கொன்றை, ஆலம், அரசம் போன்ற 9 வகையான மர விதைகள் பந்துகளாக உருட்டும் தொடக்க நிகழ்வை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அய்யா தொடங்கி வைத்தார். 

இந்த முறை வேலூர் வேலம்மாள் பள்ளியில் 300 மாணவ மாணவிகளுடன் இணைந்து 1 லட்சம் பந்துகளை தயாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் தினேஷ் சரவணன்.

நிச்சயம் தினேஷ் சரவணன் டீமை பாராட்ட வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்