சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக தயாராக உள்ளது.
முன்னதாக அனிருத் இசையில் மனசிலாயா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு குறித்த ரஜினியின் குட்டி ஸ்டோரி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன மாதிரியான குட்டிக்கதை பேசுவார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}