குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா.. உடல் நிலை குறித்து கவனம் செலுத்தப் போவதாக கடிதம்

Jul 21, 2025,09:58 PM IST

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், "மருத்துவ ஆலோசனை" மற்றும் தனது ஆரோக்கியத்திற்கு "முன்னுரிமை" அளிக்கும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது ராஜினாமா முடிவைத் தெரிவித்துள்ளார்.


"எனது உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 67(அ)-ன் படி, நான் எனது இந்தியக் குடியரசு துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என்று அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அந்தக் கடிதத்தில், "எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்கும், நாம் பேணி வந்த இனிமையான அற்புதமான பணி உறவுக்கும்" குடியரசுத் தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


"மாண்புமிகு பிரதமருக்கும், மதிப்பிற்குரிய அமைச்சரவைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை, மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மறக்க முடியாத ஜெகதீப் தன்கர் - மமதா பானர்ஜி மோதல்கள்


கடந்த 2022ம் ஆண்டு நடந்த குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர். வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு இந்தப் பதவிக்கு அவர் வந்தார்.


வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியானவர். மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்தபோதுதான் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவருக்கும், அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நடந்த எலி - பூனை சண்டை மிகப் பிரபலமானது. இந்தப் பதவியிலிருந்துதான் அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வந்தார். 


குடியரசுத் துணைத் தலைவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருக்கிறார் என்பதால் ராஜ்யசபாவிலும் இவரது செயல்பாடுகள் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் இவருக்கும் இடையிலான அனல் பறக்கும் வார்த்தைப் போர் மறக்க முடியாதது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை

news

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

news

புதிய படங்களை 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடலாம்.. தியேட்டர்களுக்கு விஜய் ஹேப்பி நியூஸ்!

news

TVK: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!

news

காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?

news

ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!

news

ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்

news

சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்