பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... ஆனா ஓட்டை அவருக்கே போடுங்க.. அதிர வைத்த  விஜய் ஆண்டனி

Apr 08, 2024,02:02 PM IST

கோவை: யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனா நல்லவர்களுக்கு  ஓட்டு போடுங்க என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி  ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வரும் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 


அப்போது, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தான் ரோமியோ திரைப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக, மனைவிமார்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒவ்வொரு கணவரும் தனது மனைவியை இப்படத்துக்கு அழைத்து வரவேண்டும்.




ரோமியோ படம் காதல் குறித்து விளக்குவதாகவம், திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த படத்தில் பேசி இருக்கிறோம்.பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே. நல்ல படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.


நான் அனைத்து கட்சிக்கும் ஆதரவு அளிக்கிறேன். அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதோ, பெறுவதோ தவறாக இருந்தாலும் வறுமை குடும்ப சூழ்நிலை கருதி அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் பணம் தான். ஆனால் பணம் பெற்று விட்டோம் என்பதற்காக அந்த கட்சிக்குதான் வாக்கு செலுத்துவோம் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்