கோவை: யார் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க. ஆனா நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வரும் 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தான் ரோமியோ திரைப்படம் உருவாகி உள்ளது. குறிப்பாக, மனைவிமார்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒவ்வொரு கணவரும் தனது மனைவியை இப்படத்துக்கு அழைத்து வரவேண்டும்.

ரோமியோ படம் காதல் குறித்து விளக்குவதாகவம், திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த படத்தில் பேசி இருக்கிறோம்.பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய், மனைவி போன்றவர்களே. நல்ல படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நான் அனைத்து கட்சிக்கும் ஆதரவு அளிக்கிறேன். அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதோ, பெறுவதோ தவறாக இருந்தாலும் வறுமை குடும்ப சூழ்நிலை கருதி அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது உங்கள் பணம் தான். ஆனால் பணம் பெற்று விட்டோம் என்பதற்காக அந்த கட்சிக்குதான் வாக்கு செலுத்துவோம் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}