டில்லி : பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதியன்று விஜய்யின் ஜனநாயகன் படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இது தொடர்பாக படக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, படத்திற்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஆனால் அவர் தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு நீதிபதிகள் அமர்வில் சென்சார் போர்டு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 09ம் தேதியன்று நடந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்சார் போர்டின் மேல்முறையீட்டிற்கு எதிராக ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 12ம் தேதியான நேற்று இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று நடைபெற உள்ளதாக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அளித்த சம்மனுக்கு நேற்று டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரான நிலையில் அவர் ஜனவரி 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 15ம் தேதி ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}