புதுச்சேரி : புதுச்சேரியில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆர்வமிகுதியால் ரசிகர்கள் செய்யும் செயல்களால் பதறி போய் உள்ளார். இதனால் விஜய் போகும் பாதைகளில் மட்டுமல்ல, விஜய்யே பதற்றத்தில் இருந்து வருகிறார்.
புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 இடங்களுக்கு வரும் ஏப்ரல் 09ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக போட்டியிடுகிறது. அங்கு போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிப்பதற்காக புதுச்சேரியில் 19 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 இடங்களில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்ய போலீசார் மற்றும் தேர்தல் கமிஷன் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 05ம் தேதி விஜய் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதே தேதியில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்கு வர உள்ளதால் விஜய்யின் பிரச்சாரம் ஏப்ரல் 04ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதன் படி, அனுமதி வழங்கப்பட்ட புதுச்சேரியின் 3 இடங்களில் பிரச்சாரம் செய்வதற்காக இன்று காலை சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் விஜய். அவரது கார் செல்லும் வழிகளில் பல இடங்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக விஜய்யின் காரின் முன்புறம் ஏறி, படுக்க துவங்கினர். விஜய்யை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் கார் மீது ஏறியதால் விஜய்யும், பவுன்சர்களும் பதறி போயினர். பவுன்சர்கள் ரசிகர்கள் பலரையும் காரின் மீது இருந்து தூக்கி, அகற்றிய போதும் தொடர்ந்து வந்த ரசிகர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பிறகு புதுச்சேரி எல்லையில் விஜய் தனது காரில் இருந்து, திறந்த பிரச்சார வாகனத்தில் ஏறி பயணம் செய்ய துவங்கினார். விசில் சின்னத்திற்காக ஓட்டு சேகரிக்க திறந்த வாகனத்தில் அவர் ரோடுஷோ நடத்திய போது, சிறுவன் ஒருவன் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் முன்புறம் ஏறி வந்ததால் விஜய் பதறி போய், அவரை கீழே இறங்கும் படி அறிவுறுத்தினார். விஜய் பலமுறை கூறிய பிறகே அந்த சிறுவன் பிரச்சார வாகனத்தின் மீதிருந்து கீழே இறங்கினான். இதனால் விஜய் செல்லும் வழி நெடுகிழும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}