சென்னை: திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது. யாரோ சொன்னதைக் கேட்டு அரசியலுக்கு வந்துள்ளார் விஜய். அவர் தன்னம்பிக்கையோடு வரவில்லை என்று சாடியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், நேற்று சென்னையில் நடந்த விகடன் பிரசுரம் ஏற்பாடு செய்திருந்த, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். விக்கிரவாண்டி பேச்சு போல இந்த பேச்சும் பல சலசலப்புகளை, விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மற்றும் இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரது பேச்சுக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்றே கூறி விட்டார். இந்த நிலையில் எழுத்தாளரும் விழுப்புரம் தொகுதி விசிக எம்.பியுமான டி. ரவிக்குமார் விஜய்யை சாடி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள்.
விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது என்று கருத்தைப் பதிவு செய்துள்ளார் எம்.பி. ரவிக்குமார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}