சென்னை: உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 20 வருடமாக இருந்து வந்த சாதனையை விராட் கோலி முறியடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மீது மோகம் கொண்டுள்ள அரசியல் தலைவர்களில் விஜயகாந்த்தும் ஒருவர். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்தான். இதை அவரே பலமுறை சொல்லியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலியின் ஒரு நாள் போட்டிகளுக்கான செஞ்சுரி சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
"கேப்டன்" விஜயகாந்த் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தேசமே இன்னிக்கு செம ஹேப்பிதான்!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}