இயற்கையின் மடியிலே!

Aug 05, 2026,03:04 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் 

இறைவா! இறைவா!!


இத்தனையும்

இயற்கை என்னும்

அன்னையின்

மடியிலே!


உதிக்கின்ற சூரியனும்,செவ்வானமும்,


குளிரை பொழியும் நிலவும்,நீல வானும்

இயற்கை தானே!


வானுயர வளர்ந்து நிழல் தரும் மரங்கள்


குடைபோல் தழைந்து நிற்கும் செடிகளும்


இயற்கையின் அழகை பேசாமல் பேசும் அழகு!




பச்சை  புல் மெத்தை விரித்த 

பசுமை பூமியின் 

கண்கொள்ளா காட்சி!


காக்கையின் கரைதல், குருவியின் கீச் கீச்,


குயில் பாட்டும்

மயிலாட்டமும் 


இயற்கையின் பரிசு அல்லவா?


மலர்களில் எத்தனை வண்ணங்கள்


எத்தனை வகைகள்

எத்தனையெத்தனை நறுமணம்


இயற்கை தந்த

இனிய வரமல்லவோ?


ஓடும் நதிகளும்

ஆடுமுயிரினங்களும்

பாடும் காடுகளும்

ஈடு இல்லா வனப்பும்


தேசுலாவும் தென்றலும்

கருவண்டாக மேகங்களும்


நிலமகள் குளிர்ந்திட

பூமி தழைத்திட

மேகங்கள்   சொரிவது மழையாக

மனிதன் சுகித்திட


பசுமை போர்வை போர்த்தி

நம்முடன் சிரித்து விளையாடும்

இயற்கையை நேசி!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்

news

செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டம் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

news

பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

news

பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

news

தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

news

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா

news

திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்

news

முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்

news

காலை காபியும் காதலும்

அதிகம் பார்க்கும் செய்திகள்