இயற்கையின் மடியிலே!

Aug 05, 2026,03:04 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் 

இறைவா! இறைவா!!


இத்தனையும்

இயற்கை என்னும்

அன்னையின்

மடியிலே!


உதிக்கின்ற சூரியனும்,செவ்வானமும்,


குளிரை பொழியும் நிலவும்,நீல வானும்

இயற்கை தானே!


வானுயர வளர்ந்து நிழல் தரும் மரங்கள்


குடைபோல் தழைந்து நிற்கும் செடிகளும்


இயற்கையின் அழகை பேசாமல் பேசும் அழகு!




பச்சை  புல் மெத்தை விரித்த 

பசுமை பூமியின் 

கண்கொள்ளா காட்சி!


காக்கையின் கரைதல், குருவியின் கீச் கீச்,


குயில் பாட்டும்

மயிலாட்டமும் 


இயற்கையின் பரிசு அல்லவா?


மலர்களில் எத்தனை வண்ணங்கள்


எத்தனை வகைகள்

எத்தனையெத்தனை நறுமணம்


இயற்கை தந்த

இனிய வரமல்லவோ?


ஓடும் நதிகளும்

ஆடுமுயிரினங்களும்

பாடும் காடுகளும்

ஈடு இல்லா வனப்பும்


தேசுலாவும் தென்றலும்

கருவண்டாக மேகங்களும்


நிலமகள் குளிர்ந்திட

பூமி தழைத்திட

மேகங்கள்   சொரிவது மழையாக

மனிதன் சுகித்திட


பசுமை போர்வை போர்த்தி

நம்முடன் சிரித்து விளையாடும்

இயற்கையை நேசி!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்